1 இராஜாக்கள் 18:38-39 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். கர்மேல் பர்வதம் மேல் பலிபீடம் கட்டியாயிற்று! எலியா கர்த்தாவே என்னைக் கேட்டருளும் என்று ஜெபித்து விட்டான். இப்பொழுது அவனுடைய ஜெபத்துக்கு பதிலாக, வானத்திலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த காளையையும், அடுக்கியிருந்த விறகுகளையும் மட்டும் அல்லாமல், பலிபீடம்… Continue reading இதழ்:1778 பரலோகத்திலிருந்து வந்த பரிசுத்த அக்கினி!
Month: May 2023
இதழ்:1777 நம்மைப் பரிசுத்தப்படுத்தவே தேவன் நம்மில் கிரியை செய்கிறார்!
1 இராஜாக்கள் 18:36-37 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம்… Continue reading இதழ்:1777 நம்மைப் பரிசுத்தப்படுத்தவே தேவன் நம்மில் கிரியை செய்கிறார்!
இதழ்:1776 பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேன் இந்த வேளை!
1 இராஜாக்கள் 18: 30 -35 அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு ,உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க… Continue reading இதழ்:1776 பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேன் இந்த வேளை!
இதழ்:1775 போலிகளை அகற்றுங்கள்!
1 இராஜாக்கள் 18 : 26 - 29 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்… Continue reading இதழ்:1775 போலிகளை அகற்றுங்கள்!
இதழ்:1774 உம்மையே நம்புவேன் ஆண்டவரே!
1 இராஜாக்கள் 18:24 நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள். இன்றைய வேதாகமப் பகுதியை நான் வாசிக்கும்போது என்னால் கர்மேல் பர்வதத்தை கண் முன்னால் கொண்டுவர முடிந்தது. நாங்கள் 2006 ல் இஸ்ரவேல் நாட்டை மாத்திரம் சுற்றிப்பார்க்க சென்றபோது கர்மேல் போகும்படியான கிருபையைக் கர்த்தர் கொடுத்தார். செழிப்பான பச்சைப் பசேலென்ற… Continue reading இதழ்:1774 உம்மையே நம்புவேன் ஆண்டவரே!
இதழ்:1773 இரண்டு நினைவுகளால் குந்திகுந்தி நடக்கும் வாழ்க்கை!
1 இராஜாக்கள் 18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஒரு பெரிய ஜனக்கூட்டமே கர்மேல் மேல் திரண்டு விட்டது! ராஜாவாகிய ஆகாப், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியா , யேசபேலின் பாகாலின் தீர்க்கதரிசிகள், மற்றும் தேவனுடைய பாதையை விட்டு விலகி சென்ற திரளான மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்தனர்.… Continue reading இதழ்:1773 இரண்டு நினைவுகளால் குந்திகுந்தி நடக்கும் வாழ்க்கை!
இதழ்:1772 என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்கிறது!
1 இராஜாக்கள் 18:19 - 20 இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். எழுப்புதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடினேன், அதற்கு மறுமலர்ச்சி, உயிர்ப்பு என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகாபுடைய ஆட்சி காலத்திலும், அவனுடைய தகப்பன் ஆண்ட காலத்திலும்… Continue reading இதழ்:1772 என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்கிறது!
இதழ்:1771 யார் மீது பழியைப் போடலாம்?
1 இராஜாக்கள் 18: 15-18 அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான். ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன்… Continue reading இதழ்:1771 யார் மீது பழியைப் போடலாம்?
இதழ்:1770 ஆகாபின் அரமனையில் ஒரு தேவ மனிதன்!
1 இராஜாக்கள் 18: 3-8 ..ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளச் சேர்த்து, அவர்களை கெபிக்கு ஐம்பது ஐம்பதுபேராக ஒளித்துவைத்து , அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அவர்களைப் பராமரித்து வந்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப்… Continue reading இதழ்:1770 ஆகாபின் அரமனையில் ஒரு தேவ மனிதன்!
இதழ்:1769 எலியாவை அழைத்த தேவன்!
1 இராஜாக்கள் 18: 1-2 அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி, நான் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார். அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்.. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வாலிபனான தீமோத்தேயு ஒரு மகனைப் போல என்று சொல்லலாம். புதிய ஏற்பாட்டில் தீமோத்தேயு 1, 2 புத்தகங்கள் இந்த கர்த்தருடைய பிள்ளைகள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை பதிவிட்டுளது, 2 தீமோத்தேய் 1:2 ல்… Continue reading இதழ்:1769 எலியாவை அழைத்த தேவன்!
