Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 182 வழிகாட்டியின் பின் செல்!

நியா:4:14  அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள். இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம். இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும்,… Continue reading மலர் 2 இதழ் 182 வழிகாட்டியின் பின் செல்!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 181 இது உன்னுடைய நாள்!

நியா: 4:14 "அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; " அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள். இதை வாசிக்கும்… Continue reading மலர் 2 இதழ் 181 இது உன்னுடைய நாள்!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்?

நியாதிபதிகள் : 4: 9  "அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்..... என்று  சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடேக் காதேசுக்குப் போனாள். நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியான தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக… Continue reading மலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்?

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 179 இரண்டு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும்!

நியாதிபதிகள் : 4 : 8   "அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. என்னுடைய  32 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும்,  நானும் என் கணவரும் சேர்ந்து,  இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட்… Continue reading மலர் 2 இதழ் 179 இரண்டு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும்!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 178 தெபோராளின் பேரீச்சமரம்!

நியாதிபதிகள்: 4:5  " அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்." இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார். இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து  ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று… Continue reading மலர் 2 இதழ் 178 தெபோராளின் பேரீச்சமரம்!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 177 மனப்பூர்வமாய்க் கீழ்ப்படி!

நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்? நாம் தெபோராளைப் பற்றி படிக்குமுன் நியாதிபதிகள் புத்தகத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று நேற்று பார்த்தோம். சரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும்… Continue reading மலர் 2 இதழ் 177 மனப்பூர்வமாய்க் கீழ்ப்படி!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 176 மனம் போன போக்கிலே வாழலாமா?

நியாதிபதிகள்: 21 : 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை;  அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நேற்று  நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பித்தோம். யோசுவா மரித்த பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாததால், கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார். காலேபுடைய மருமகன் ஒத்னியேல் பல வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தார். ஒத்னியேல் நியாயம் தீர்த்த காலத்தில் இஸ்ரவேல் கர்த்தரை பின்பற்றினர், ஒத்னியேலின் மரணத்துக்கு பின்னர், இஸ்ரவேல் மக்களும் பின்வாங்கினர். பின்னர் கர்த்தர் தெபோராளை எழுப்பினார். தெபோராள் நியாயம்… Continue reading மலர் 2 இதழ் 176 மனம் போன போக்கிலே வாழலாமா?

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 175 சாதாரணமா? அசாதாரணமா?

நியாதிபதிகள்:  4 :5 " அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்." நாம் யோசுவா புத்தகத்தை படித்து விட்டு, இப்பொழுது, நியாதிபதிகள் படிக்க ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம்.தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள். தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில்  கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். நாம்… Continue reading மலர் 2 இதழ் 175 சாதாரணமா? அசாதாரணமா?

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 174 எனக்கு ஜீவ ஊற்றைத் தாரும்!

யோசுவா: 15: 19  அப்பொழுது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்.அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து  நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு… Continue reading மலர் 2 இதழ் 174 எனக்கு ஜீவ ஊற்றைத் தாரும்!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 173 இன்று உனக்கு என்ன வேண்டும்!

யோசுவா: 15:18 காலேப் (அவளைப்) பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றான். யோவான்: 5:6 (இயேசு) அவனை நோக்கி சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். இயேசு கிறிஸ்துவானவர் இந்த பூமியில் வாழ்ந்த போது, தான் சென்ற இடமெல்லாம் நோயாளிகளை சொஸ்தமாக்கினார் என்று நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அப்படிப் பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் பெதஸ்தா குளத்துக்க்கரையில் 38 வருடங்களாகக் காத்திருந்த ஒரு மனிதனை சுகமாக்கியது. அன்றைய நாட்களில், நோய் என்பது ஒருவனுடைய பாவத்தினால் வரும் தண்டனை என்று… Continue reading மலர் 2 இதழ் 173 இன்று உனக்கு என்ன வேண்டும்!