யோசுவா: 15:18 அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு , கழுதையின் மேலிருந்து இறங்கினாள். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.… Continue reading மலர் 2 இதழ் 172 கேள்! பெற்றுக் கொள்!
Author: Rajavinmalargal
மலர் 2 இதழ் 171 நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும் தகப்பன்!
யோசுவா: 15:16 " கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்." நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading மலர் 2 இதழ் 171 நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும் தகப்பன்!
மலர் 2 இதழ் 170 உன் எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்!
யோசுவா: 15: 14 "அங்கேயிருந்து சேசாய், அதீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்தி விட்டு," நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading மலர் 2 இதழ் 170 உன் எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்!
மலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்!
யோசுவா: 14: 12 கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு… Continue reading மலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்!
மலர் 2 இதழ் 168 மலைகளைத் தாண்ட பெலன்!
யோசுவா: 14: 12 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்கு போக்கும் வரத்துமஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசித்த பின்னர் காலேப் அவர்களை நோக்கி நாற்பது வருடங்களுக்கு முன்னால் தான் இஸ்ரவேலை… Continue reading மலர் 2 இதழ் 168 மலைகளைத் தாண்ட பெலன்!
மலர் 2 இதழ் 167 கடல் போன்ற பரந்த உள்ளம்!
யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோஎன் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு திரும்பினர்.… Continue reading மலர் 2 இதழ் 167 கடல் போன்ற பரந்த உள்ளம்!
மலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்!
யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். யோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம். அடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு மரித்துப் போன என்னுடைய அப்பாவின்… Continue reading மலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்!
மலர் 2 இதழ் 165 ‘அப்பா என்பது’ ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்!!
யோசுவா:14:6 கேனாசியனான எப்புனேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி; காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். இன்றைக்கு இந்த தியானத்தை எழுதும்போது, என்னுடைய அப்பா இறந்து 26 நாட்களே ஆகியுள்ளன. அப்பா மரிப்பதற்க்கு முன்பே நான் இந்த தியானத்தை எழுத ஆரம்பித்திருந்தேன். தகப்பன் மகள் உறவைப் பற்றிய இந்த தியானத்தை அப்பா இறந்த பின்னால் என்னால் எழுதவே முடியவில்லை. அப்பாவை இழந்த வேதனையுடன்தான் எழுதுகிறேன். எப்பொழுதோ வாசித்த வாசகம் ஒன்று " பெண்… Continue reading மலர் 2 இதழ் 165 ‘அப்பா என்பது’ ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்! ( மாற்கு:6:50) "தளர்ந்த கைகளை திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள், மனம்பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ உங்கள் தேவன் நீதியை சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்…" ஏசாயா: 35: 3,4 ராஜாவின் மலர்கள் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! பயம் என்பது நம்மில் அனேகருக்குள் பலவிதங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் கடைசிநாளில் தாணே புயல் காற்று வீசியதால் வந்த அழிவைப் பார்த்து… Continue reading புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதிய ஆண்டில் ராஜாவின் மலர் தொடரும்!
ராஜாவின் மலர்கள் வாசகர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். கடந்த இரண்டு மாதங்களாக வேதாகம தியானத்தை தொடர்ந்து எழுத முடியாத வேளையிலும் உங்கள் அன்பும் ஜெபமும் என்னைத் தாங்கியது. இந்த புதிய ஆண்டிலிருந்து தியானத்தை தொடர்ந்து தடையில்லாமல் எழுத கர்த்தர் என்னோடு இருந்து பெலன் தர வேண்டுமென்று ஜெபியுங்கள்! உங்கள் சகோதரி பிரேமா சுந்தர் ராஜ்
