யாத்தி: 2: 3 அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்ப்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும், கீலும் பூசி , அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். மோசே அழிவிலிருந்து மீட்கப்பட்ட இந்த கதையை மறுபடியும் வாசிக்கும்போது, கண்ணில் பட்ட இன்னுமொரு அருமையான காரியம், யோகெபெத்தின் கைவிரல்களின் சிருஷ்டிப்பு திறமை! யொகேபேத் தன்னுடைய பத்து விரல்களால் திறமையாக, அங்கே நைல் நதியண்டை கிடைக்கிற சாதாரண நாணல் என்னும் புல்லைக் கொண்டு, ஒரு பேழையை… Continue reading மலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!
Category: Bible Study
மலர் 6 இதழ் 345 சிறுவனை இரட்சித்த ராஜகுமாரத்தி!
" யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.” பார்வோனின் குமாரத்தி எகிப்து சாம்ராஜ்யத்தில் செல்வத்தில் வளர்ந்தவள். அவள் தந்தை ராஜ்யத்தை ஆண்டதால் அவள் நினப்பதை பெற்றுக்கொள்ளும் செல்வாக்கு நிறைந்தவள். ஆனால்… Continue reading மலர் 6 இதழ் 345 சிறுவனை இரட்சித்த ராஜகுமாரத்தி!
மலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்?
யாத்தி :2:2, 9 “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்” பெண்களின் வாழ்க்கையை மலரோடு ஒப்பிடுவார்கள்! ஏனெனில் மலர் என்றாள் கிள்ளி எறிந்து விடலாம் அல்லவா? ஆனால் யாரோ ஒருவர்… Continue reading மலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்?
மலர் 6 இதழ் 343 யொகெபேத் அறிமுகம்! யாரிவர்?
யாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் தேவன் மேல் கொண்டிருந்த பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைக் கர்த்தர் காத்தார் என்று பார்த்தோம். பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், பிறந்த… Continue reading மலர் 6 இதழ் 343 யொகெபேத் அறிமுகம்! யாரிவர்?
மலர் 6 இதழ் 342 சிசு கொலை செய்யாததால் பெற்ற ஆசீர்வாதம்!
யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோனின் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம். இந்த இரு… Continue reading மலர் 6 இதழ் 342 சிசு கொலை செய்யாததால் பெற்ற ஆசீர்வாதம்!
மலர் 6 இதழ் 341 தெள்ளந்தெளிவாக பதிலளிக்கும் வரம்!
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” யோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள், அங்கே பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1:7,8 கூறுகிறது, யோசேப்பும், அவன் சகோதரர் யாவரும்… Continue reading மலர் 6 இதழ் 341 தெள்ளந்தெளிவாக பதிலளிக்கும் வரம்!
மலர் 6 இதழ் 340 துரோகியை மன்னிப்பது எப்படி?
ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி! உங்கள் வாழ்வில் யாரையாவது பார்த்து, ஏன் ஒருவேளை உங்கள் உறவினரை பார்த்து, நாளுக்கு நாள் அவர்கள் பேசும் கொடிய… Continue reading மலர் 6 இதழ் 340 துரோகியை மன்னிப்பது எப்படி?
On this Sunday evening I was thinking of the delicate mint plants that have grown around our home in Valparai. It is extremely rocky terrain. We have been building supportive walls on the pathway with stones that were unearthed right there. Last week while I was there, I saw the tiny mint plants and some… Continue reading
மலர் 6 இதழ் 339 தீமைக்கல்ல! நன்மைக்கே!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம்… Continue reading மலர் 6 இதழ் 339 தீமைக்கல்ல! நன்மைக்கே!
மலர் 6 இதழ் 338 அந்நிய பெண்ணை மணக்கலாமா?
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். நாங்கள் அமெரிக்காவில் எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து,… Continue reading மலர் 6 இதழ் 338 அந்நிய பெண்ணை மணக்கலாமா?
