யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்…” யாத்திராகமத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்! இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் பகலிலே மேக ஸ்தம்பமாகவும் , இரவிலே அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார். அன்று இஸ்ரவேல் மக்கள் கண்ட அற்புதங்களைப் போல நம்மில் யாராவது கண்டதுண்டா? எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள்… Continue reading இதழ்: 1062 திக் திக்கென்ற பயம்!
Category: Tamil Bible study
இதழ்: 1061 திகையாதே! வெற்றி உனதே!
யாத்தி: 14: 1,4 “கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்….” கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிறங்கக் கட்டளையிட்டார் என்று பார்த்தோம். இன்று நாம் அந்த சம்பவத்தைத் தொடருவோம். பார்வோனின் அரண்மனையில் ஒரே பரபரப்பு! ஒரே ஆரவாரம்! ஏன்? கோஷேன் நாட்டிலிருந்து… Continue reading இதழ்: 1061 திகையாதே! வெற்றி உனதே!
இதழ்:1060 கனமகிமையை வெளிப்படுத்தும் வனாந்திரம்!
யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே…… சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. இதுவரை நாம் மோசேயின் வாழ்வைப்பற்றி படித்துக் கொண்டிருந்தோம். இனி நாம் இஸ்ரவேல் மக்களுடன் நம்முடைய பிரயாணத்தைத் தொடருவோம்! சில நேரங்களில் நாம் உபயோகப்படுத்தும் நூல் சிக்கு ஆடி விடும். அப்படிப்பட்ட ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சிக்கி இருக்கும் நுல்களை… Continue reading இதழ்:1060 கனமகிமையை வெளிப்படுத்தும் வனாந்திரம்!
இதழ்: 1059 நீ அமைதியாயிருந்தால் கர்த்தர் கேட்பார்!
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். நேற்று நாம் மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டு… Continue reading இதழ்: 1059 நீ அமைதியாயிருந்தால் கர்த்தர் கேட்பார்!
இதழ்: 1058 பெரியவர்களின்ஆலோசனை ஒரு விலை உயர்ந்த பரிசு போன்றது!
யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்………” 18:24 மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம். யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். மோசேயின் குடும்பம்… Continue reading இதழ்: 1058 பெரியவர்களின்ஆலோசனை ஒரு விலை உயர்ந்த பரிசு போன்றது!
இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!
யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் கடந்த நாட்களில் மோசேயுடைய வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்த பெண்களைப் பற்றி அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், அவனை பரிவுடன் வளர்த்து ராஜ குமாரனாக்கிய பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவனாவதற்கு ஒருமுக்கிய காரணம் வகுத்தனர். அவன் மனைவியாகிய சிப்போராள்… Continue reading இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!
இதழ்: 1056 கீழ்ப்படியாமையால் வந்த ஆபத்து!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்…. வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை என்று பார்த்தோம். பல கனவுகளோடு… Continue reading இதழ்: 1056 கீழ்ப்படியாமையால் வந்த ஆபத்து!
இதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா?
யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். இன்று நாம் மோசேயை மணந்த சிப்போராளைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம்! மோசே!!!!!! 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து… Continue reading இதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா?
இதழ்: 1054 நம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருமா?
யோவான்:13: 34 “ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்” கடந்த சில வாரங்களாக நாம் யாத்திராகம புத்தகத்தில்பெஇடம் பெற்றுள்ள அநேகப் ண்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல்… Continue reading இதழ்: 1054 நம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருமா?
இதழ்: 1053 நன்றியால் துதி பாடு!
எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும். அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி… Continue reading இதழ்: 1053 நன்றியால் துதி பாடு!
