1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான் எலியா தன்னுடைய பரமபிதாவாகிய தேவனாகியக் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட சாறிபாத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் இந்த சீதோன் நாட்டைப் பற்றி என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருந்திருக்கும்? இஸ்ரவேலர் இவர்களை எதிரி என்று அல்லவா எண்ணினார்கள்! அந்த நாட்டு மக்களோடு அவன் எப்படி வாழ முடியும்? ஒரு வருடத்துக்கு முன்பு அவன் அந்த கேரீத் ஆற்றண்டையில் வந்த போது, உணவுக்காக… Continue reading இதழ்:2335 நம் தேவன் நமக்கு மட்டுமே சொந்தமல்ல!
Category: Tamil Bible study
இதழ்:2334 ஒவ்வொரு விசுவாசியும் கடந்து வரும் உருக்காலை உண்டு!
1 இராஜாக்கள் 17:8-9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்தஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். நான் இரும்புத்தாதுகளை உருக்கி இரும்பை எடுக்கும் பெரிய உருகாலைகளைப் பார்த்ததில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு பழைய நகை ஒன்றை மாற்றுவதற்காக சென்றேன். அதை உருக்கும்படி என்னை உள்ளே அழைத்து சென்றனர். அங்கே… Continue reading இதழ்:2334 ஒவ்வொரு விசுவாசியும் கடந்து வரும் உருக்காலை உண்டு!
இதழ்:2333 பிடுங்கி நடப்பட்டால்தானே கனி கொடுக்க முடியும்?
1 இராஜாக்கள் 17:8-9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். எரேமியாவின் புஸ்தகத்தில் 47:1 ல் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம் என்று எழுதியிருக்கிறதை படித்தபோது எனக்கு எலியாவின் ஞாபகமே வந்தது. இந்தத் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு அடிக்கடி வந்தது.… Continue reading இதழ்:2333 பிடுங்கி நடப்பட்டால்தானே கனி கொடுக்க முடியும்?
இதழ்:2332 இம்மட்டும் நடத்தியவர் இன்று கைவிட்டுவிடுவாரா?
1 இராஜாக்கள் 17:7 - 9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். எலியா கேரீத் ஆற்றண்டையில் குடிவந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. என்னுடைய கட்டிலும் மெத்தையும் இல்லாமல் நான் தூங்கவே மாட்டேன் என்று நீயும் நானும் நமக்குள் சொல்லிக்… Continue reading இதழ்:2332 இம்மட்டும் நடத்தியவர் இன்று கைவிட்டுவிடுவாரா?
இதழ்:2331 நாம் நம்பியிருந்த யாவும் வறண்டு போகும் போது?
1 இராஜாக்கள் 17:7 தேசத்தில் மழை பெய்யாதபடியினால் சிலநாளுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. யாத்திராகமம் 14:13 ... பயப்படாதிருங்கள். நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். தேவனுடைய மனுஷனான எலியா ஒரு வருடமாக கேரீத் ஆற்றங்கரையை தன் தங்குமிடமாகக் கொண்டிருக்கிறான். அவனுடைய தாகத்தை ஒவ்வொருநாளும் தீர்த்து வந்த ஆறு இப்பொழுது தண்ணீரற்று வரண்டு போயிற்று. உன்னுடைய பெயர் எலியாவென்றால் இந்த சூழலில் நீ என்ன நினைத்திருப்பாய்? இதையெல்லாம் முன்னரே… Continue reading இதழ்:2331 நாம் நம்பியிருந்த யாவும் வறண்டு போகும் போது?
இதழ்:2330 காத்திருப்பு கசப்பாய்த் தோன்றும் நாட்கள்!
1 இராஜாக்கள் 17:5 அவன் போய் கஎத்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காத்திருப்பது யாருக்குமே பிடிக்காத காரியம் என்று நினைக்கிறேன்! எதற்காகவாவது அல்லது யாருக்காவது அதிக நேரம் காத்திருந்து விட்டால், எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டோம் என்று நான் நினைப்பதுண்டு. ஒருநாள் நாங்கள் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தபோது திடீரென்று முன்னால் செல்ல முடியாதபடி வாகனங்கள் நிறுத்தப்பட்டன! இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தோம். என்னக் காரணம் என்றேத் தெரியவில்லை. பக்கத்தில்… Continue reading இதழ்:2330 காத்திருப்பு கசப்பாய்த் தோன்றும் நாட்கள்!
இதழ்:2329 அன்றன்று கேரீத்தண்டை வந்து பெற்றுக்கொள்!
1 இராஜாக்கள் 17:6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன் இன்று நாம் இந்த வசனத்தைத் தான் படிக்கப்போகிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால் நான் இன்று 2 இராஜாக்கள் 25:30 ல் காணப்படும், வேதத்தில் அடிக்கடி நினைவுபடுத்தப்பட்ட ஒன்றைதான் எழுதப்போகிறேன். 2 இராஜாக்கள் 25:30 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும்… Continue reading இதழ்:2329 அன்றன்று கேரீத்தண்டை வந்து பெற்றுக்கொள்!
இதழ்:2328 காகம் மூலமோ அல்லது கப்பல் மூலமோ உன் தேவை சந்திக்கப்படும்!
1 இராஜாக்கள் : 17: 4 - 6 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய்க் கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அங்கு விடியற்காலை 5 மணிக்கே நாங்கள் இருவரும் நடப்பதற்காக வெளியே செல்லுவோம்.… Continue reading இதழ்:2328 காகம் மூலமோ அல்லது கப்பல் மூலமோ உன் தேவை சந்திக்கப்படும்!
இதழ்:2327 உன்னை உருவாக்கும் தேவன்!
1 இராஜாக்கள் 17:2-3 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. கீலேயாத்தின் குடிகளிலிருந்து எலியா கர்த்தரால் அழைக்கப்பட்டு, இஸ்ரவேலில் பாகால் வழிபடுதலை மையமாகக் கொண்டிருந்த சமாரியாவுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்டான் என்று பார்த்தோம். கர்த்தர் தனக்குக் கொடுத்த பணியை அவன் ஆகாபின் அரண்மனையில் செய்து முடித்தவுடன் கர்த்தர் அவனுக்கு இன்னொரு செய்தியை கொடுக்கிறார். அவர் இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்… Continue reading இதழ்:2327 உன்னை உருவாக்கும் தேவன்!
இதழ்:2326 ஜெபிக்கும் வாஞ்சையைத் தந்தருளும்!
1 இராஜாக்கள் 17:1 கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி; என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அக்கிரமம் நிறைந்த ஆகாபின் முன்னால் எலியா ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தினால் வந்து நின்றான் என்று பார்த்தோம். தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து வந்த பலருக்கு, யெரொபெயாமிலிருந்து ஆரம்பித்த அந்த நீடிய 40 வருட காலகட்டம் தேவனால் மறக்கப்பட்ட காலம் போலத்… Continue reading இதழ்:2326 ஜெபிக்கும் வாஞ்சையைத் தந்தருளும்!
