ஆதி: 39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். இந்த லெந்து நாட்களில் நாம் சற்று நம்முடைய உள்ளான மனிதனை ஆராயந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் இன்று யோசேப்பைப் பின் தொடரலாம்! யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது! யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! என்றுமே கண்டிராத புதிய நாட்டில், புதிய… Continue reading இதழ்: 1630 சற்று அனுசரித்துப் போகும் வாழ்க்கை உண்டா?
Category: Tamil Bible study
இதழ்:1629 பிள்ளைகளுக்காக உன் வாழ்வை மாற்றிக்கொள்!
ஆதி: 5: 22 ஏனோக்கு, மெத்தூசலாவைப் பெற்ற பின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் லெந்துகால தியானத்தைத் தொடருவோம்! நாம் சென்ற வாரம் காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும், கர்த்தர் ஆபேலுக்கு பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம். இந்த அதிகாரம் தான் ஆதாமின் தலைமுறையை அவனுடைய குமாரனாகிய சேத்தின் தலைமுறையோடு இணைக்கும் பாலமாகும்! முதலில்… Continue reading இதழ்:1629 பிள்ளைகளுக்காக உன் வாழ்வை மாற்றிக்கொள்!
இதழ்:1628 தேவனை சோதிக்காதே! தண்டித்தால் தாங்க மாட்டாய்!
ஆதி 4: 23 – 24 .... லாமேக்கின் மனைவிகளே என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள். எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன். எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன். காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுத்தேழு பழி சுமரும் என்றான். லெந்து கால தியானத்துக்காக காயீனின் 6வது தலைமுறையான லாமேக்கைப் பற்றி நேற்று பார்த்தோம்! காயீன் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி தன்னுடைய சகோதரனைக் கொன்றவுடனே தேவன் அவனைக் கொன்றிருக்கலாம்! ஆனால்… Continue reading இதழ்:1628 தேவனை சோதிக்காதே! தண்டித்தால் தாங்க மாட்டாய்!
இதழ்:1627 நம்மைத் தொடர்ந்து பிடிக்கும் பாவம்!
ஆதி: 4:18 காயீன் ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான். நாம் இந்த லெந்து நாட்களில் நம்மை ஆராய்ந்து பார்க்கும்படி வேதத்தின் வெளிச்சத்தில் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று நமக்குத் தெரியும். அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன் நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது, கர்த்தர் காயீனுடைய… Continue reading இதழ்:1627 நம்மைத் தொடர்ந்து பிடிக்கும் பாவம்!
இதழ்:1626 ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கு!
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்மை வழி நடத்தும்படி ஜெபிப்போம். இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து பார்க்க ஆகானின்… Continue reading இதழ்:1626 ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கு!
இதழ்:1625 எந்த சிற்றின்பத்தை இன்று ஒளித்து வைத்திருக்கிறாய்?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து அறிய, நாம் நேற்று ஆகானைப்பற்றிப் படித்தோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை… Continue reading இதழ்:1625 எந்த சிற்றின்பத்தை இன்று ஒளித்து வைத்திருக்கிறாய்?
இதழ்:1624 கண்களால் காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை!
யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நான் எலியாவைப் பற்றித் தொடரும்முன் இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து பார்க்கும்படியாக ஒருசிலருடையை வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். நாங்கள் அடிக்கடி வால்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு… Continue reading இதழ்:1624 கண்களால் காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை!
இதழ்:1623 நல்ல குடும்பம் அமைய ஒரு யோசனை!
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். சில வருடங்களுக்கு முன் மே மாதம் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர்… Continue reading இதழ்:1623 நல்ல குடும்பம் அமைய ஒரு யோசனை!
இதழ்:1622 உன் வாழ்க்கையை முற்றிலும் மாற்ற வல்ல அற்புதம்!
1 இராஜாக்கள் 17:10-11 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோதுஅவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். நாம் இன்றைய வேதாகமப் பகுதியில் எலியாவுக்கும் , இந்த அந்நிய நாட்டு விதவைக்கும் முதல் சந்திப்பிலே… Continue reading இதழ்:1622 உன் வாழ்க்கையை முற்றிலும் மாற்ற வல்ல அற்புதம்!
இதழ்: 1621 வெறுமையான உன் வாழ்வு மலரும்!
1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். இன்றைய வேதாகமப் பகுதியில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள் என்றதை சற்று உற்றுப் பார்த்தேன். அவள் பெயர் கொடுக்கப்படவில்லை, அவள் வயது கொடுக்கப்படவில்லை, அவள் எவ்வளவு காலம் விதவையாயிருந்தாள் என்று தெரியாது. அவள் சாறிபாத் என்ற ஊரில் வாழ்ந்தாள் என்றும், அவள் ஏழை என்றுமே நமக்குத் தெரியும். நாம் நேற்றைய… Continue reading இதழ்: 1621 வெறுமையான உன் வாழ்வு மலரும்!
