அப்போஸ்தலர்: 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததைப் பார்த்தோம்! பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள்.… Continue reading இதழ்:1663 நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள்!
Category: Thought for today
இதழ்:1662 ஒரு காவியத்தலைவியின் கதை!
ஆதி: 6:18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடே கூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை. அவர்களுடைய பெயர் வெளியே வருவதேயில்லை! அப்படிப்பட்ட பெயர் எழுதப்படாத ஒரு காவியத்தலைவி தான் நோவாவின் மனைவி! ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி,… Continue reading இதழ்:1662 ஒரு காவியத்தலைவியின் கதை!
இதழ்:1661 தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாய் வாழ்ந்தவர்!
ஆதி : 5: 27 மெத்துசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.. மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று வேதம் கூறுகிறது. இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 969 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான், நோவா பிறக்கும்… Continue reading இதழ்:1661 தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாய் வாழ்ந்தவர்!
இதழ்:1660 தேவனை முகமுகமாய் தரிசித்த நாட்கள் எங்கே?
ஆதி: 5:5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளை சற்று திரும்பிப் பார்போம். ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதை நாம் அறிவோம்! அவர்கள் இருவரும் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்! அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட கால வாழ்க்கையில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியாமையால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பார்கள்! ஒரு… Continue reading இதழ்:1660 தேவனை முகமுகமாய் தரிசித்த நாட்கள் எங்கே?
இதழ்:1659 ஆபத்திலிருந்து நம்மை தப்புவிக்கும் ஜெபம்!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த இரவில் உணவு அருந்தி விட்டு ஸ்தோத்திரப் பாட்டைப் பாடிய பின்னர் அவர்கள் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கு அவர் தம்முடைய சீஷருடனே அன்று இரவு சம்பவிக்கப்… Continue reading இதழ்:1659 ஆபத்திலிருந்து நம்மை தப்புவிக்கும் ஜெபம்!
இதழ்:1658 உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்யும் பாடம்!
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” சென்னையில் வளர்ந்த எனக்கு வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது. முதல்… Continue reading இதழ்:1658 உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்யும் பாடம்!
இதழ்:1657 ஞானமுள்ள இருதயம் உன் முன்னால் உள்ள திரைகளை அகற்றும்!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்:1657 ஞானமுள்ள இருதயம் உன் முன்னால் உள்ள திரைகளை அகற்றும்!
இதழ்:1656 ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும்!
ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. இந்த வசனத்தை வாசிக்கும் என் கண்களில் கண்ணீர் பெருகியது. ஏனெனில் ஒருநாள் நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது என் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. நான் தேவனாகியக் கர்த்தரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கும்படி எனக்குத் தருணம் கொடுக்கப்பட்டால் நான் என்ன கேள்வி கேட்பேன் என்று. நான்… Continue reading இதழ்:1656 ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும்!
இதழ்:1655 முன்னோக்கி செல்வேன்! முன்னோக்கி செல்வேன்!
ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம் மட்டுமல்லாமல் , தைரியத்தோடு அவள் எடுத்த முடிவால் , கர்த்தர் அவள் வாழ்க்கையில் பெரியத் திட்டங்களை நிறைவேற்றினார். ரூத்தின்… Continue reading இதழ்:1655 முன்னோக்கி செல்வேன்! முன்னோக்கி செல்வேன்!
இதழ்:1654 அவர் நடத்தும் பாதையில் நடக்கக் கிருபை!
ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” தாவீதின் கதையைக்கேளுங்க! பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க! இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது அந்த தாவீதின் கதையைக் கேளுங்க! இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி… Continue reading இதழ்:1654 அவர் நடத்தும் பாதையில் நடக்கக் கிருபை!
