2 நாளாகமம்: 20:14,15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார். இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. நேற்று நாம் ராஜாவகிய யோசபாத்தைப் பற்றிப்படிக்க ஆரம்பித்தோம். அவனுக்கு , மோவாப் புத்திரர், அம்மோன் புத்திரர், அம்மோனியருக்கு அப்புறம் உள்ள மனுஷர் என்ற முப்படைகளின் தாக்குதல் வந்தது என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல ராஜா பயந்து தேவனுடைய சமூகத்தைத் தேடினான் என்று பார்த்தோம்.… Continue reading இதழ்:2312 நம் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை!
இதழ்:2311 பயம் நம்மை அடிமையாக்கும்! விசுவாசமே நம்மை விடுவிக்கும்.
2 நாளாகமம் 20 :1 -3 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கறையிலிருக்கிற சிரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து , கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் 2… Continue reading இதழ்:2311 பயம் நம்மை அடிமையாக்கும்! விசுவாசமே நம்மை விடுவிக்கும்.
இதழ்:2310 ஜெபம் என்பது தேவன் உன்னை சந்திக்கும் இடம்!
யாக்கோபு 5 :17 ,18 எலியா என்பவன் நம்மை போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை .மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையை பொழிந்தது, பூமி தன் பலனைத்தந்தது. கிறிஸ்துவுக்கு பின்னால் 48வது வருடம் கழித்து யாக்கோபு இந்த ஐந்தாவது அதிகாரத்தை எழுதும் பொழுது , அந்தக் காலத்தின் இளம் திருச்சபையாருக்கு , நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து ஒரு… Continue reading இதழ்:2310 ஜெபம் என்பது தேவன் உன்னை சந்திக்கும் இடம்!
இதழ்:2309 மிகச் சாதாரணமான ஓர் மண்பாண்டம் நான்!
யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்.... எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது. இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி, நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று கூறுகிறது. இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு. வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம், வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே… Continue reading இதழ்:2309 மிகச் சாதாரணமான ஓர் மண்பாண்டம் நான்!
இதழ்:2308 தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் அழியாது!
1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான். நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.… Continue reading இதழ்:2308 தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் அழியாது!
இதழ்:2307 தம்முடைய புயத்தால் என்னை நடத்தும் என் தேவன்!
ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிக் கொண்டிருந்த வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் எலியாவின் வாழ்க்கையை மறுபடியும் கண்ணோக்கி விட்டு, எலிசாவின் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கிறேன். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப்… Continue reading இதழ்:2307 தம்முடைய புயத்தால் என்னை நடத்தும் என் தேவன்!
இதழ்:2306 தேவனுடைய செட்டைகள் மட்டுமே கொடுக்கும் பாதுகாப்பு!
1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து, ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக 'ஒரு நன்மையும் இல்லை ' என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான். அவன் தனக்கு… Continue reading இதழ்:2306 தேவனுடைய செட்டைகள் மட்டுமே கொடுக்கும் பாதுகாப்பு!
இதழ்:2305 இருளின் மத்தியில் ஓர் ஒளிக்கதிர்!
1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனைப் பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம். தேவனை அறியாத, மற்றும் கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நாம் எப்படி… Continue reading இதழ்:2305 இருளின் மத்தியில் ஓர் ஒளிக்கதிர்!
இதழ்:2304 பரலோக தேவன் யாவற்றையும் அறிவார்!
1 இராஜாக்கள் 16:1-3 பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்; நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துக்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களை ஒரு… Continue reading இதழ்:2304 பரலோக தேவன் யாவற்றையும் அறிவார்!
இதழ்:2302 மன்னிக்கும் போது நாம் கடவுளின் குணத்தை உடையவர்களாகிறோம்!
1 இராஜாக்கள் 15:25 -26 ... யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி....கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து... தன் தகப்பன் பாவத்திலும்...நடந்தான். 28: பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். 30: அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். நம்முடைய காலத்தில் ஊழியம் செய்து சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமுக்கு அடுத்தபடியாக உலக சுவிசேஷகர் என்று அழைக்கப்படும் பாஸ்டர் சார்ல்ஸ் சுவிண்டோல் அவர்களை… Continue reading இதழ்:2302 மன்னிக்கும் போது நாம் கடவுளின் குணத்தை உடையவர்களாகிறோம்!
