1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான். சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று.… Continue reading இதழ்:2064 அன்பு பயத்தை மேற்கொண்டது!
இதழ்:2063 மென்மையான வார்த்தைகள் ஒரு ஆயுதம் போன்றவை!
1 சாமுவேல் 19: 1-6 தாவீதைக் கொன்றுப்போடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். சவுலின் குமாரனாகிய யோனத்தானோ தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்..... யோனதான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி ... தாவீதைக் கொல்லுகிறதினால் குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ் செய்வானேன் என்றான். சவுல் யோனத்தனுடைய சொல்லைக்கேட்டு அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டான். இன்னும் தாவீதைக் கொல்லும் வெறி சவுலுக்கு அடங்கவில்லை. முதலில்… Continue reading இதழ்:2063 மென்மையான வார்த்தைகள் ஒரு ஆயுதம் போன்றவை!
இதழ்:2062 உனக்கு சுகமளிக்கும் தைலம் அவரே!
1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி... மீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது. மீகாள் , தான் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் அவள் தாவீதை… Continue reading இதழ்:2062 உனக்கு சுகமளிக்கும் தைலம் அவரே!
இதழ்:2061 உன் நம்பிக்கையும் சந்தோஷமும் அவரே!
1 சாமுவேல் 18:17 சவுல் தாவீதை நோக்கி: இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன். நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலால் தாவீதைக் கொல்லமுடியவில்லை. அவனிடம் கர்த்தரின் ஞானம் இருந்ததால் சவுல் அவனைக்கண்டு பயந்தான் என்று படித்தோம் அல்லவா? இப்பொழுது சவுல் ஒரு தந்திரமான திட்டம் தீட்டுவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். என்னத் திட்டம் அது? என் குமாரத்தியை உனக்கு கல்யாணம்… Continue reading இதழ்:2061 உன் நம்பிக்கையும் சந்தோஷமும் அவரே!
இதழ்:2060 நீ யாரையும் கூவி அழைக்கத் தேவையில்லை!
1 சாமுவேல் 18:15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். தாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்ததையும் அவன் புத்திமானாய் நடந்து கொள்வதையும் சவுல் கண்டு அவனுக்கு பயந்தான் என்று இன்றைய வசனம் சொல்கிறது. தாவீது செய்த எல்லா காரியங்களிலும் பரலோக தேவன் அளித்த ஞானம் புலப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது. ஒருவேளை தாவீதின் முகத்தைப் பார்க்ககூட பயந்தானோ என்னவோ அதனால் சவுல் அவனைத் தொட பயந்து என்… Continue reading இதழ்:2060 நீ யாரையும் கூவி அழைக்கத் தேவையில்லை!
இதழ்:2059 குடும்பங்களை பாதிக்கும் யுத்தம்!
1 சாமுவேல்: 18: 7 -9 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து .... இந்த வருடத்தின் ஆறு மாதங்களைக் கடந்து ஏழாம் மாதத்தைக் காணச்செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு, நாம் நம்மை அவருடைய பலத்த கரத்துக்குள் ஒப்புவிப்போம்! இஸ்ரவேலில் கொண்டாட்டம்! பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதின்… Continue reading இதழ்:2059 குடும்பங்களை பாதிக்கும் யுத்தம்!
இதழ்: 2058 சந்தோஷம்? சமாதானம், மகிழ்ச்சி என்றால் என்ன?
1 சாமுவேல்: 18:6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலிமிருந்து ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும், கீதவாத்தியங்களோடும், சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். காலை எழுந்தவுடன் கவலையில்லாமல் பாடும் பறவைகளைக் கேட்டதுண்டா? காற்றினால் அசைவாடும் மரங்களின் ஆடல்பாடலைக் கேட்டதுண்டா? நிம்மதியாகப்புல்வெளியில் மேயும் மாடுகளைப் பார்த்ததுண்டா? இரவில் பளிச்சென்று மின்னும் நட்சத்திரங்களைக் கண்டதுண்டா? இவை எந்தக் கவலையும் இல்லாமல் எத்தனை சமாதானமாய், சந்தோஷமாய் இருக்கின்றன என்று நான் அடிக்கடி நினைப்பேன்!… Continue reading இதழ்: 2058 சந்தோஷம்? சமாதானம், மகிழ்ச்சி என்றால் என்ன?
இதழ்:2057 புத்திசாலியாக ஒரு நல்ல எதிர்காலத்தைத் தேடிக்கொள்!
1 சாமுவேல் 18:5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனை போர்ச்சேவகர்களுக்கு அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் கூறுகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது. இந்த அழகிய வாலிபன் புத்தியாய்க்… Continue reading இதழ்:2057 புத்திசாலியாக ஒரு நல்ல எதிர்காலத்தைத் தேடிக்கொள்!
இதழ்:2056 பெரிய பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுகிறாயா?
1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய வசனம் நமக்கு கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று தெலிவாகக் காட்டுகிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம். தாவீது தன் சிறியக் கரங்களில் கவணையும், கற்களையும் ஏந்தி கோலியாத்துக்கு எதிராக வந்தக்… Continue reading இதழ்:2056 பெரிய பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுகிறாயா?
இதழ்:2055 அன்று நடத்தியவர் இன்று கைவிடுவாரா?
1 சாமுவேல் 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். ஒருமுறை எங்களுடைய ரிசார்ட் இருக்கும் வால்பாறை அருகே கரடியால் தாக்கப்பட்ட ஒருவரின் படத்தை யாரோ அனுப்பியிருந்தார்கள். உடம்பு சிலிர்த்தது! வலது கையை கடித்து குதறியிருந்தது. என்னக் கொடூரமான மிருகம் என்று நினைத்தேன்! இரண்டுமுறை எங்கள் கார் முன்னால் கரடி குறுக்கே ஓடியததைப் பார்த்திருக்கிறேன். இன்றைய வசனத்தில்,ஒருமுறை கரடி மட்டும் அல்ல சிங்கமும் தாவீதையும்… Continue reading இதழ்:2055 அன்று நடத்தியவர் இன்று கைவிடுவாரா?
