கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 681 ஏமாற்றுதலுக்கு பதிலாய் நேர்மை!

1 சாமுவேல் 27:10 இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும்,….கேனியருடைய தென் திசையிலும் என்பான்.

2 சாமுவேல் 5:3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள். தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.

இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ஒரு மனிதனுக்கு ஏமாற்றவும் தெரியும், அதே சமயம் நேர்மையாய் இருக்கவும் தெரியும் என்று தெரிகிறது.

சவுலுக்கு பயந்து ஓடிக் களைத்துப்போன தாவீது, பெலிஸ்தியரின் தேசத்தில் தஞ்சம் புகுந்தான். அங்கு பிழைக்க வழியில்லாமல் பெலிஸ்தியரை கொள்ளையடித்த  அவன், பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீஸிடம் தான் இஸ்ரவேலரைக் கொள்ளையடித்ததாக பொய் சொன்னான். அவன் அந்த நாட்களில் கர்த்தரின் வழிநடத்துதலின் படி வாழவில்லை. பெலிஸ்தியரை ஏமாற்ற முடிவு செய்தான். அது அவனுக்குத் தவறாகவே தெரியவில்லை!

ஆனால் கர்தருடைய கிருபையால் இஸ்ரவேலின் மூப்பர் தாவீதிடம் வந்து இஸ்ரவேலை ஆளும்படி கேட்டபோது அவன்  தன்னுடைய கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினான் என்று பார்க்கிறோம். அவன் நேர்மையாய் இஸ்ரவேலை ஆளுவான் என்று மக்கள் அவனை நம்ப வேண்டும் என்று விரும்பினான். அவனுடைய வார்த்தையை  ஒரு தேவனுடைய மனிதனின் வார்த்தையாக  மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்பினான்.இப்படிப்பட்ட ஆசை நமக்கும் உண்டு அல்லவா? நம்மை சுற்றியுள்ளவர்கள், நம்முடைய குடும்பம், நண்பர்கள் யாவரும் நம்முடைய நேர்மையை  நம்ப வேண்டும் என்றுதானே நாமும் விரும்புவோம்!

நேர்மையைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?

ஒரு நல்ல காரியத்தை நடத்துவிக்க நாம் பொய் சொல்லலாமா? அது நேர்மையா? தாவீது தன்னை சுற்றியுள்ளவர்களைக் காப்பாற்ற ஒரு பெலிஸ்தியன் என்ற எதிரியின் ராஜாவை ஏமாற்றியது தவறா? இல்லையா?

சரிக்கும் தவறுக்கும் இடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் நேர்மை என்றுதான் நினைக்கிறேன். நேர்மை என்பது தான் நாம் கிறிஸ்துவின் சீஷர் என்பதின் மறுபெயர் என்றும் நினைக்கிறேன்.

நம்முடைய நேர்மையான நடத்தை மட்டுமே கிறிஸ்துவை இந்த உலகத்துக்குக் காட்டும் ஒளி! நாம் பிரசங்கம் பண்ணிவிட்டு நம்முடைய வாழ்க்கையில் நேர்மையாக இல்லாமல் வாழ்வோமானால் நம்முடைய பிரசங்கத்தால் என்ன பிரயோஜனம்?

சிந்தித்து பாருங்கள்! தாவீதைப் போல தவறான வாழ்க்கையை உடனே திருத்திக் கொள்ளுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ரா

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment