ஆயிசு நாட்களை கூட்டிய ஒரு ஜெபம்
ஏசா: 38:5 “நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் விண்ணபத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்”
ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வரலாம் என்று தோன்றுகிறது! நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறோம்! நாம் அனைவரும் ஒருமுகமாக ஏன் ஜெபிக்கக் கூடாது? விசேஷமாக இந்தக் கொள்ளை நம்மை சுற்றி வருகிற இந்த நாட்களில் நாம் தேவனை சார்ந்து அவருடைய சமுகத்தை நாடுவோம்.
உங்களுக்கு ஏதாவது விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமாயினும் கூட என்னுடைய மெயில் ஐடி க்கு எழுதி அனுப்புங்கள்!
இன்றைய வேத வசனத்தில், எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு இருக்கையில், அவன் அழுது ஜெபித்தபோது, கர்த்தர் ஏசாயா தீர்கதரிசி மூலமாய் கொடுத்த வாக்குத்தத்தத்தை வாசிக்கிறோம். வேதம் சொல்கிறது அவன் வியாதி நீங்கி சொஸ்தமானான் என்று.
தேவன் இன்று நம் குடும்பத்தில் உள்ள வியாதியை சொஸ்தமாக்க வல்லவர் என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போம்.
எசேக்கியாவைப் போல நாமும் மனங்கசந்து , தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக் கேட்பார்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premac2c@gmail.com
The only weapon available to overcome all difficulties, trails, testing, sickness, is PRAYER. Satan dare to come near when we pray. (James 4:7). The only silent listener to all coversation, and Prayer is the Our Lord alone. He prayed, for all of us. (John 17). The more we pray, the more power we receive from Him. Pray without ceasing.