2 நாளாகமம் 20: 16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய் போங்கள்; இதோ அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள். நான் வர்ணம் ஆர்ட்ஸ் ஸ்கூல் மூலமாக படங்கள் வரையக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பென்சில் மூலமாக ஒரு அருமையான படத்தை வரைந்தேன். அது மிகவும் அழகாக வந்ததினால் எங்கள் வீட்டில் அதை பிரேம் செய்து மாட்டியிருந்தோம். அந்தப் படத்தில் அலைக்கழிக்கும் அலைகள் மத்தியில்… Continue reading இதழ்:1596 இயேசுவே என் கப்பலோட்டியாயிரும்!
Month: January 2023
இதழ்: 1595 யுத்தம் யாருடையது என்பதை மறந்து போக வேண்டாம்!
2 நாளாகமம்: 20:14,15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே கேளுங்க்ல்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார். இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. நேற்று நாம் ராஜாவகிய யோசபாத்தைப் பற்றிப்படிக்க ஆரம்பித்தோம். அவனுக்கு , மோவாப் புத்திரர், அம்மோன் புத்திரர், அம்மோனியருக்கு அப்புறம் உள்ள மனுஷர் என்ற முப்படைகளின் தாக்குதல் வந்தது என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல ராஜா பயந்து தேவனுடைய சமூகத்தைத் தேடினான் என்று பார்த்தோம்.… Continue reading இதழ்: 1595 யுத்தம் யாருடையது என்பதை மறந்து போக வேண்டாம்!
இதழ்:1594 நமக்கு எதிராய் வரும் முப்படைகள்!
2 நாளாகமம் 20 :1 -3 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கறையிலிருக்கிற சிரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து , கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் 2… Continue reading இதழ்:1594 நமக்கு எதிராய் வரும் முப்படைகள்!
இதழ்:1593 ஜெபிக்கத் தேவையானது வல்லமை அல்ல! உறவுதான்!
யாக்கோபு 5 :17 ,18 எலியா என்பவன் நம்மை போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை .மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையை பொழிந்தது, பூமி தன் பலனைத்தந்தது. கிறிஸ்துவுக்கு பின்னால் 48வது வருடம் கழித்து யாக்கோபு இந்த ஐந்தாவது அதிகாரத்தை எழுதும் பொழுது , அந்தக் காலத்தின் இளம் திருச்சபையாருக்கு , நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து ஒரு… Continue reading இதழ்:1593 ஜெபிக்கத் தேவையானது வல்லமை அல்ல! உறவுதான்!
இதழ்:1592 சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள மண்பாண்டங்கள்!
யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்.... எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது. இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று பார்க்கிறோம். இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு. வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம். வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே தேவன்,… Continue reading இதழ்:1592 சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள மண்பாண்டங்கள்!
இதழ்:1591 காலத்தால் அழிக்க முடியாத வார்த்தைகள்!
1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான். நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.… Continue reading இதழ்:1591 காலத்தால் அழிக்க முடியாத வார்த்தைகள்!
இதழ்:1590 யெகோவா-யீரே நம் தேவைகளை சந்திப்பார்!
ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக நான் எழுத ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்டதொரு இருண்ட நாட்களில், பழிவாங்குதலும், விக்கிரக ஆரதனையும் தலைவிரித்து ஆடிக்… Continue reading இதழ்:1590 யெகோவா-யீரே நம் தேவைகளை சந்திப்பார்!
இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!
1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து, ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக 'ஒரு நன்மையும் இல்லை ' என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான். அவன் தனக்கு… Continue reading இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!
இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!
1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். இன்று நாம் மறுபடியும் 1 ராஜாக்களின் புத்தகத்தைத் தொடரப் போகிறோம். இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனை பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம். தேவனை அறியாத, மற்றும் கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு… Continue reading இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!
இதழ்:1587 A VERY BLESSED NEW YEAR 2023!
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ராஜாவின் மலர்களை வாசிப்போர் 60 க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து இந்த இணைய தளத்திற்கு வருகை தருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்து என் தேவனை ஸ்தோத்தரித்தேன். அது போக 650 பேர் இதை தினமும் உங்களது ஈமெயில் மூலம் பெற்றுக் கொள்கிறீர்கள். அநேகர் இதை தினமும் வாட்ஸ்அப் மூலம் உங்கள்… Continue reading இதழ்:1587 A VERY BLESSED NEW YEAR 2023!
