யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து அறிய, நாம் நேற்று ஆகானைப்பற்றிப் படித்தோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை… Continue reading இதழ்:1625 எந்த சிற்றின்பத்தை இன்று ஒளித்து வைத்திருக்கிறாய்?
Month: February 2023
இதழ்:1624 கண்களால் காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை!
யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நான் எலியாவைப் பற்றித் தொடரும்முன் இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து பார்க்கும்படியாக ஒருசிலருடையை வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். நாங்கள் அடிக்கடி வால்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு… Continue reading இதழ்:1624 கண்களால் காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை!
இதழ்:1623 நல்ல குடும்பம் அமைய ஒரு யோசனை!
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். சில வருடங்களுக்கு முன் மே மாதம் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர்… Continue reading இதழ்:1623 நல்ல குடும்பம் அமைய ஒரு யோசனை!
இதழ்:1622 உன் வாழ்க்கையை முற்றிலும் மாற்ற வல்ல அற்புதம்!
1 இராஜாக்கள் 17:10-11 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோதுஅவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். நாம் இன்றைய வேதாகமப் பகுதியில் எலியாவுக்கும் , இந்த அந்நிய நாட்டு விதவைக்கும் முதல் சந்திப்பிலே… Continue reading இதழ்:1622 உன் வாழ்க்கையை முற்றிலும் மாற்ற வல்ல அற்புதம்!
இதழ்: 1621 வெறுமையான உன் வாழ்வு மலரும்!
1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். இன்றைய வேதாகமப் பகுதியில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள் என்றதை சற்று உற்றுப் பார்த்தேன். அவள் பெயர் கொடுக்கப்படவில்லை, அவள் வயது கொடுக்கப்படவில்லை, அவள் எவ்வளவு காலம் விதவையாயிருந்தாள் என்று தெரியாது. அவள் சாறிபாத் என்ற ஊரில் வாழ்ந்தாள் என்றும், அவள் ஏழை என்றுமே நமக்குத் தெரியும். நாம் நேற்றைய… Continue reading இதழ்: 1621 வெறுமையான உன் வாழ்வு மலரும்!
இதழ்:1620 நம்மைக் குறைவுபடாமல் பராமரிக்கும் தேவன்!
1 இராஜாக்கள் 17: 9-10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியாவைக் கர்த்தர் சாறிபாத்துக்கு போ என்று கட்டளையிட்டார் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவன் அறியாத ஊரில், அவன் அறியாத ஒரு… Continue reading இதழ்:1620 நம்மைக் குறைவுபடாமல் பராமரிக்கும் தேவன்!
இதழ்:1619 உனக்காக யாவையும் செய்து முடிப்பார்!
1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட பாகால் வழிபாட்டுஸ்தலமான சாறிபாத்துக்கு 150 கிமீ தூரம் பிரயாணம் பண்ணி சென்றான் என்று பார்த்தோம். எலியா சாறிபாத்தின் ஒலிமுகவாசலில் உள்ளே பிரவேசிக்கிறான், அங்கே ஒரு விதவை விறகு பொறுக்குவதற்காக வெளியே வருகிறாள்.அவர்கள் சந்தித்தது ஒரு விபத்தா அல்லது தற்செயலாக நடந்ததா??… Continue reading இதழ்:1619 உனக்காக யாவையும் செய்து முடிப்பார்!
இதழ்:1618 சாறிபாத்தை நோக்கி புறப்படுவாயா?
1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான் எலியா தன்னுடைய பரமபிதாவாகிய தேவனாகியக் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட சாறிபாத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் இந்த சீதோன் நாட்டைப் பற்றி என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருந்திருக்கும்? இஸ்ரவேலர் இவர்களை எதிரி என்று அல்லவா எண்ணினார்கள்! அந்த நாட்டு மக்களோடு அவன் எப்படி வாழ முடியும்? ஒரு வருடத்துக்கு முன்பு அவன் அந்த கேரீத் ஆற்றண்டையில் வந்த போது, உணவுக்காக… Continue reading இதழ்:1618 சாறிபாத்தை நோக்கி புறப்படுவாயா?
இதழ்:1617 சாறிபாத் என்ற உருக்காலை!
1 இராஜாக்கள் 17:8-9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்தஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். நான் இரும்புத்தாதுகளை உருக்கி இரும்பை எடுக்கும் பெரிய உருகாலைகளைப் பார்த்ததில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு பழைய நகை ஒன்றை மாற்றுவதற்காக சென்றேன். அதை உருக்கும்படி என்னை உள்ளே அழைத்து சென்றனர். அங்கே… Continue reading இதழ்:1617 சாறிபாத் என்ற உருக்காலை!
இதழ்:1616 வண்டலின் மேல் அசையாமல் நிற்கும் வாழ்க்கை??
1 இராஜாக்கள் 17:8-9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். எரேமியாவின் புஸ்தகத்தில் 47:1 ல் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம் என்று எழுதியிருக்கிறதை படித்தபோது எனக்கு எலியாவின் ஞாபகமே வந்தது. இந்தத் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு அடிக்கடி வந்தது.… Continue reading இதழ்:1616 வண்டலின் மேல் அசையாமல் நிற்கும் வாழ்க்கை??