ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே, ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது. இது கர்த்தர் ஒரு… Continue reading இதழ்:2557 கர்த்தர் உன் வாழ்வில் ஓர் புதிய துவக்கத்தைக் கொடுக்கப் போகிறார்!
Month: June 2026
இதழ்:2556 இந்த இலையுதிர் காலம் சீக்கிரம் கடந்து போகும்! நம்பிக்கையோடிரு!
ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம்.அங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் ஸ்பிரிங் சீசனில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வண்ணமயமான இலைகளுடன் கண்களைக் குளிரச் செய்தது.… Continue reading இதழ்:2556 இந்த இலையுதிர் காலம் சீக்கிரம் கடந்து போகும்! நம்பிக்கையோடிரு!
இதழ்:2555 கசப்பு என்பது ஒரு நச்சு! அது நம்மை அழித்துவிடும்!
ரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.” இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத் என்ற… Continue reading இதழ்:2555 கசப்பு என்பது ஒரு நச்சு! அது நம்மை அழித்துவிடும்!
இதழ்:2554 அன்பினால் என்னைக் கண்டெடுத்த தேவன் அன்பையே என்னிடம் எதிர்பார்க்கிறார்!
ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். இந்தப் புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இம்மட்டும் காத்த தேவனின் கிருபை இந்த மாதமும் நம்மைக் காத்து வழிநடத்துமாறு ஒருகணம் ஜெபிப்போம்! ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக்… Continue reading இதழ்:2554 அன்பினால் என்னைக் கண்டெடுத்த தேவன் அன்பையே என்னிடம் எதிர்பார்க்கிறார்!
