1 சாமுவேல் 7:8 (இஸ்ரவேல் புத்திரர்) சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள். இருபது வருடங்கள்! கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப் போய் இருபது வருடங்கள்! பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது போதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர்! எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர்! தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய்,… Continue reading மலர் 5 இதழ் 308 எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள்!
Author: Rajavinmalargal
NOT SEEN YET BELIEVED!
But on the first day of the week at early dawn, the women went to the tomb, taking the spices which they had made ready. And they found the stone rolled back from the tomb. But when they went inside, they did not find the body of the Lord Jesus (Luke 24: 1-3) I just… Continue reading NOT SEEN YET BELIEVED!
மலர் 4 இதழ் 307 எத்தனை வருடங்கள் எழுப்புதலே இல்லை?
1 சாமுவேல்: 6:1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது. 1 சாமுவேல்: 7:2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாம் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள். பெலிஸ்தர் யுத்தத்தில் இஸ்ரவேலரை வென்றது மட்டுமல்லாமல் வீட்டுக்குத் திரும்பும்போது பெரிய பதக்கம் போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து சென்றனர் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்கள் அதை தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். ஆனால் இரண்டே நாளின் தாகோனுக்குத் தலையும்… Continue reading மலர் 4 இதழ் 307 எத்தனை வருடங்கள் எழுப்புதலே இல்லை?
மலர் 4 இதழ் 306 ஒருவருக்கே இடம் உண்டு!
1 சாமுவேல் 5: 4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்த போது, இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துக்கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது. பெலிஸ்தர் மிகுந்த ஆர்ப்பரிப்போடு இருந்தனர். இஸ்ரவேல் மக்களை யுத்தத்தில் தோற்கடித்தது மட்டுமல்ல, திரும்பும்போது ஒரு பெரிய பதக்கம் கிடைத்தது போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் கிடைத்தது. அதைக் கொண்டு போய் தாகோனின் கோவிலிலே, தாகோனண்டையிலே… Continue reading மலர் 4 இதழ் 306 ஒருவருக்கே இடம் உண்டு!
மலர் 4 இதழ் 305 கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழாது!
1 சாமுவேல் 3: 19 "சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவில்லை. இன்று நாம் இந்த வசனத்தைப் பார்க்கும் முன்னர், " …உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும், உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள். அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை" (யோசுவா 23:14 ) என்ற யோசுவாவின் வார்த்தைகளை சற்றுத் திரும்பிப்… Continue reading மலர் 4 இதழ் 305 கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழாது!
மலர் 4 இதழ் 304 கர்த்தரின் மகிமையற்ற இடத்தில் வாழ்கின்றாயா?
1 சாமுவேல்: 4: 21, தேவனுடைய பெட்டி பிடிபட்டு. அவளுடைய மாமனும், அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். இன்றைய வேதாகமப் பகுதியில், நிறை கர்ப்பிணியான ஏலியின் மருமகள், கர்த்தரின் பெட்டி பிடிபட்டதையும், தன் கணவனும், மாமனாரும் மரித்துப் போனதையும் கேட்ட போது, வேதனையில் பிரசவித்து கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள் என்று பார்க்கிறோம். மறுபடியும் இங்கு சிமியோனின்… Continue reading மலர் 4 இதழ் 304 கர்த்தரின் மகிமையற்ற இடத்தில் வாழ்கின்றாயா?
மலர் 4 இதழ் 303 கர்த்தர் என்ன நம் மின் சாதனமா?
I சாமுவேல் 4:3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். நம்முடைய இந்த ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் உலகத்தின் 38 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்து பயனடைகின்றனர். உங்கள் அனைவருக்கும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் வந்திருக்கும் மின்சாதனங்களைப் பற்றி… Continue reading மலர் 4 இதழ் 303 கர்த்தர் என்ன நம் மின் சாதனமா?
மலர் 4 இதழ் 302 சொல்லும், அடியேன் கேட்கிறேன்!
1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான். 1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். ஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு… Continue reading மலர் 4 இதழ் 302 சொல்லும், அடியேன் கேட்கிறேன்!
The Rock of Ages!
Nearly 37 years ago, I took a tour with my friends to a little mountain town near us, at sunset the five of us on the trip enjoyed an evening meal under the shelter of a large rock. Just as we laid out our lunch, a very large cloudburst brought an abundance of rain. But… Continue reading The Rock of Ages!
HIS PRESENCE BANISHES ALL FEAR!
On Oct 7th 2013, my husband and I were traveling to New york. since our friend lives near Newburg airport we flew from Philadelphia to Newburg in a small plane. Unfortunately, on this particular day, the wind was fierce. Our pilot reported he had never seen turbulence this bad! ! All I can say is,… Continue reading HIS PRESENCE BANISHES ALL FEAR!
