Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 280 நகோமி ஒரு ஞானமுள்ளத் தாய்!

ரூத்: 3: 18 " அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 - 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான  சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading மலர் 3 இதழ் 280 நகோமி ஒரு ஞானமுள்ளத் தாய்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 279 மருமகளின் சொல்லுக்கு செவிகொடுத்த மாமியார்!

ரூத்: 1:18  "அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை." நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்ட " நமக்கு கர்த்தர் ஒரு வாயும், இரண்டு செவிகளும் கொடுத்திருப்பது நாம் குறைவாய் பேசவும், நிறைய கேட்கவும் தான்" என்ற பேருண்மை என் மனதில் என்றும் தங்கி விட்டது. என்னுடைய வாழ்நாளில் இந்த உண்மை என்னை பல இக்கட்டான சம்பவங்களில் காப்பாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடன் வேலை செய்த… Continue reading மலர் 3 இதழ் 279 மருமகளின் சொல்லுக்கு செவிகொடுத்த மாமியார்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 278 ரூத்தின் குணநலன்கள் – 4

ரூத்: 2: 10   "அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்". ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக்… Continue reading மலர் 3 இதழ் 278 ரூத்தின் குணநலன்கள் – 4

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 277 ரூத்தின் குணநலன்கள் – 3

ரூத்: 2: 21 "பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்." நாம் ரூத்தின் குணநலன்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம்  மட்டுமல்லாமல் ,  தைரியத்தோடு  அவள் எடுத்த முடிவால் , கர்த்தர்… Continue reading மலர் 3 இதழ் 277 ரூத்தின் குணநலன்கள் – 3

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 276 ரூத்தின் குணநலன்கள் – 2

ரூத்: 1 : 16   "அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;" தாவீதின் கதையைக்கேளுங்க! பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க! இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது அந்த தாவீதின் கதையைக் கேளுங்க! இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி… Continue reading மலர் 3 இதழ் 276 ரூத்தின் குணநலன்கள் – 2

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 275 ரூத்தின் குணநலன்கள் – 1

ரூத்: 2: 11 " அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது." சில மாதங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல… Continue reading மலர் 3 இதழ் 275 ரூத்தின் குணநலன்கள் – 1

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 274 நம் ஆத்தும இரட்சகர்!

ரூத்: 4:15 " அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்". கடந்த இரண்டு வாரங்கள் நான் வெளியூர் சென்றதால் என்னால் ராஜாவின் மலர்களைத் தொடரமுடியவில்லை. கர்த்தர் என்னை நல்ல சுகத்தோடும் பெலத்தோடும் மறுபடியும் இந்த தியானத்தைத் தொடரும்படி கொடுத்த கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன்… Continue reading மலர் 3 இதழ் 274 நம் ஆத்தும இரட்சகர்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 273 அவர் நம் மீட்பர்!

லேவியராகமம்: 25: 25  " உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்". காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத்,  வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து போவாஸின்… Continue reading மலர் 3 இதழ் 273 அவர் நம் மீட்பர்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 272 ஆறுதல் தருபவர்!

ரூத்: 2: 13 " அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்." இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன், இது ஒரு மனதைத் தொடும் வசனம் இதை எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது. இஸ்ரவேலரில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த போவாஸிடம் ரூத் வந்தபோது, அவனுடைய தகுதிக்கும், மதிப்பும், முன்னால் தான்… Continue reading மலர் 3 இதழ் 272 ஆறுதல் தருபவர்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 271 தாகம் தீர்ப்பவர்!

ரூத்: 2 : 9  "...உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணிர்க்குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்." யோவான்: 4: 13, 14  "இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக; இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணிரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்". தண்ணீர்க்குடம், தாகம் என்ர வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு ஞாபகத்துக்கு வருபவள் சமாரிய ஸ்திரீ தான் அல்லவா! கர்த்தராகிய… Continue reading மலர் 3 இதழ் 271 தாகம் தீர்ப்பவர்!