நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” என்னுடைய கல்லூரி காலத்தில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு… Continue reading இதழ்:1196 கண்ணீர் இருதயங்களை இணைத்த நேரம்!
Category: Tamil Bible study
இதழ்:1195 ஆறுதலை அளித்த ஒரு நட்பு!
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம். அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே இருண்டு… Continue reading இதழ்:1195 ஆறுதலை அளித்த ஒரு நட்பு!
இதழ்:1194 நம்பகமான நட்பு உன்னிடம் உண்டா?
நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.” எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு நாய்க்குட்டியும் நண்பர்களைப்போல சுற்றி வந்ததைப் பற்றி படித்தேன். ஒருமுறை வால்ப்பாறைக்கு போகும் வழியில் ஒரு வரையாடும், ஒரு குரங்கும் நண்பர்களைப்போல உலா வந்ததைப் படம் எடுத்தோம். நல்ல நட்புக்கு விலங்குகள்… Continue reading இதழ்:1194 நம்பகமான நட்பு உன்னிடம் உண்டா?
இதழ்: 1193 சிந்திக்காமல் சிந்தும் வார்த்தைகள்!
நியாதிபதிகள் 11:31 “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”. ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்! பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டனர். இன்றும் அந்த வார்த்தைகளை நினைக்கும்போது என் மனதில் எங்கேயோ ஒருஇடத்தில் இரத்தம் கசிவது போல இருக்கும். நான்… Continue reading இதழ்: 1193 சிந்திக்காமல் சிந்தும் வார்த்தைகள்!
இதழ்:1192 அனுதினமும் பெலன் கர்த்தர் தரும் ஈவு!
நியாதிபதிகள்: 11:33 ” அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்.” இன்றைய வேதாகமப்பகுதியை நான் வாசித்தபோது, ஒருகணம் நான் என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எத்தனை முறை நான் என்னால் இதை செய்ய முடியும், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று நினைத்திருக்கிறேன் என்று எண்ணிப்பார்த்தேன். நான் சாதித்து விடுவேன் என்று நினைத்த பலவேளைகளில் நான் தலை குப்புற விழுந்ததுண்டு. நேற்று… Continue reading இதழ்:1192 அனுதினமும் பெலன் கர்த்தர் தரும் ஈவு!
இதழ்:1191 சுயநலமென்ற சுமைகளை இறக்கி விடு!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் என்னும் இரண்டெழுத்து பெருமை, பொறாமை, சுயநலம், அவல ஆசைகள், கேவலமான நடத்தை போன்ற பல பாவங்களுக்கு ஆதாரம் என்ற நமக்கு நன்றாகத் தெரியும். கடந்த சில நாட்களாக நாம் யெப்தாவின் கதையைப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆண்டவரே இந்தக் கதையின் மூலமாய் நீர் எனக்கு எதைக் கற்பிக்க விரும்புகிறீர் என்று நான் ஒவ்வொருநாளும் ஜெபித்துவிட்டுத்தான்… Continue reading இதழ்:1191 சுயநலமென்ற சுமைகளை இறக்கி விடு!
இதழ்:1190 பொறுப்பற்றத் தன்மை வேண்டாம்!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; எதற்கெடுத்தாலும் ஆள்க்காட்டி விரலை நீட்டி மற்றவர்கள்மேல் குற்றம் சாட்டுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பழியை பந்து எறிந்து விளையாடுவது போலத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப்… Continue reading இதழ்:1190 பொறுப்பற்றத் தன்மை வேண்டாம்!
இதழ் :1189 வார்த்தைகளை எண்ணாதே! எடை போடு!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.” என்னுடைய ஊழியத்தின் காரணமாக பல ஊர்களுக்கு நான் காரில் பிரயாணப்படுவதுண்டு. சில நேரங்களில் காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு தருமபுரியில் உள்ள எங்களது மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கு சென்று, பின்னர்அதே நாளில் அங்கிருந்து 3… Continue reading இதழ் :1189 வார்த்தைகளை எண்ணாதே! எடை போடு!
இதழ்:1188 இதை உன்னிடம் கேட்டாரா?
நியாதிபதிகள்:11:34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை, குமாரத்தியும் இல்லை. ஒரு மகளின் சரிதையைப் படிக்கப்போகிறோம்! பெயர் தெரியாத ஒரு மகள்! வயது தெரியாத ஒரு மகள்! அவள் தந்தை பெயர் யெப்தா என்று மட்டும் தெரியும்! அவன் ஒரு பரஸ்திரீயின் மகன்! ஒரு முரட்டு வீரன், யுத்தத்துக்கு அழைப்பவர்களுக்கு உதவியாக சென்று… Continue reading இதழ்:1188 இதை உன்னிடம் கேட்டாரா?
இதழ் :1187 கிடைத்தவுடன் கொடுத்தவரை மறந்து விடாதே!
நியாதிபதிகள் 11: 32 ” யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்”. இன்றைக்கு உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்! உண்மையாக மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! நீங்கள் வாழ்வின் உச்சியில் சுகமாய் வாழ்ந்த போது எடுத்த ஏதோ ஒரு முடிவினால் வெட்கப்பட்டு தாழ்சியடைந்து நாணிப்போனதுண்டா? அப்படிப்பட்ட தவறு செய்திருப்பீர்களானால், இன்றைய வேதாகமப்பகுதி உங்களுக்குத்தான்! நான் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ள பெயர்களை பார்க்கும்போது இந்தப்பெயர் இங்கு ஏன் இடம்… Continue reading இதழ் :1187 கிடைத்தவுடன் கொடுத்தவரை மறந்து விடாதே!
