1 இராஜாக்கள் 17:1 கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி....... இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். கடந்த சில வாரங்களாக நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எலியா வாழ்ந்த காலத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது! ஒருவேளை நான் ஆகாப் ஆளுகை செய்து கொண்டிருந்த வேளை அங்கே பெத்தேலில் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன் என்றால் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்… Continue reading இதழ்:2325 என் தேவன் எங்கே என்று சத்துரு கேட்கும் போது?
Category: Tamil Bible study
இதழ்:2324 எரிமலை போன்ற வருகை தந்தவன்!
1 இராஜாக்கள்: 17:1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி என்னுடைய நண்பர்களில் பலருக்கு நல்ல குடும்பப் பின்னணி உண்டு! அவர்களுடைய சொந்தங்கள் எல்லா ஊரிலேயும் இருப்பார்கள். ஆனால் என்னுடைய பெற்றோரைப் பற்றி நினைக்கும்போது , அவர்கள் பிறந்த குக்கிராமங்களைப் பற்றி யோசிக்கும்போது, இந்த உலகத்தில் நான் எந்த விசேஷமான அடையாளமும் இல்லாதவள் போலத்தோன்றும். உங்களில் யாருக்காவது என்னைப்போலத் தோன்றியது உண்டா? அப்படித் தோன்றியிருக்குமானால் நமக்கு ஒரு துணை உண்டு! அடுத்த இரண்டு வாரங்கள் நாம்… Continue reading இதழ்:2324 எரிமலை போன்ற வருகை தந்தவன்!
இதழ்:2323 ஊழியத்தில் பேரார்வம் உண்டா?
1 இராஜாக்கள்: 16: 29 -30 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில்,உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். வேதத்தை ஆராய்ந்து படிக்கும்போது சில தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். காயீனுக்கும் ஆபேலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஆபிரகாமும் லோத்தும்… Continue reading இதழ்:2323 ஊழியத்தில் பேரார்வம் உண்டா?
இதழ்:2322 அன்றன்று தேவைகளை திட்டமிட்டு அளிக்கிறார்!
யாத்திராகமம் 23: 20, 23, 30 வழியில் உன்னை காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன். என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார். அவர்களை நான் அதம்பண்ணுவேன். நீ விருத்தியடைந்து தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்தி விடுவேன். கடந்த நாட்களில் நாம் 2 நாளாகம்… Continue reading இதழ்:2322 அன்றன்று தேவைகளை திட்டமிட்டு அளிக்கிறார்!
இதழ்:2321 இளைப்பாறுதல் தரும் தேவனே!
2 நாளாகமம் 20 :30 இவ்விதமாய் தேவன் சுற்றுபுறத்தாரால் யுத்தம் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்கு கட்டளை யட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. ராஜாவாகிய யோசபாத்தின் சரித்திரத்தை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அவன் தேவனுக்காக வாழ தன் மனதிலே முடிவு செய்து, தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அவன் நெருப்பிலே புடமிடப்பட்டான், அவனை முப்படைகள் தாக்கின. எதிரிகளை சந்திக்க வனாந்தரத்துக்கு புறப்பட்டான் ஆனால் அங்கு ஆசீர்வாதத்தை சந்தித்தான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதி தேவனை நான் இன்னும்… Continue reading இதழ்:2321 இளைப்பாறுதல் தரும் தேவனே!
இதழ்:2320 எந்தன் நாவில் புதுப்பாட்டு!
2 நாளாகமம் 20 :27 ,28 பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும் அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள். அவர்கள் தம்பருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் தாமே நம்மோடிருந்து நம்மைக் காத்து வழிநடத்துவாராக! யூதாவின் ராஜாவாகிய யோசபாத் மும்முரமாக தேவனுக்காக ஊழியம் செய்த நாட்களில்… Continue reading இதழ்:2320 எந்தன் நாவில் புதுப்பாட்டு!
இதழ்:2319 எண்ணிப்பார் நீ பெற்ற ஆசீர்வாதங்களை!
2 நாளாகமம் 20 :25 ,26 யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்த போது , அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலருந்து உரிந்து போட்ட ஆடை ஆபரணங்களும் , தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது ; மூன்று நாளாய் கொள்ளையிட்டார்கள் ; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது . நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற படி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள். இன்று காலையிலிருந்து… Continue reading இதழ்:2319 எண்ணிப்பார் நீ பெற்ற ஆசீர்வாதங்களை!
இதழ்:2318 நம்மைத் தம்முடைய பரந்த சிந்தையோடு பார்க்கும் தேவன்!
2 நாளாகமம் 20 :23, 24 எப்படியெனில் அம்மோன் புத்திரரும், மோவாபியரும் , சேயிர் மலைத்தேசக்குடிகளை சங்கரிக்கவும், அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துததீர்ந்தபோது தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்க விதமாய் கைகலந்தார்கள் . யூதா மனுஷர் வனாந்தரத்தில் உள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திக்கை நோக்குகிற போது, இதோ அவர்கள் தரையிலே விழுந்து கிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. அதிகமாக சந்தேகப்படுகிறவர்களை நாம் சந்தேகக் கண்கள் உடையவர்கள் என்று… Continue reading இதழ்:2318 நம்மைத் தம்முடைய பரந்த சிந்தையோடு பார்க்கும் தேவன்!
இதழ்:2317 அவர் கிருபை நித்தியமானது! அழிந்து போவதல்ல!
2 நாளாகமம் 20 :21 -22 பின்பு அவன் ஜனத்தொடேஆலோசனைபண்ணி ,பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் , ஆயுதம்அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத்துதியுங்கள்அவர்கிருபை என்றும்உள்ளதென்று கர்த்தரைப்பாடவும் , பாடகரை நிறுத்தினான். அவர்கள்பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது யூதாவுக்கு விரோதமாய்வந்து பதிவிரந்த அம்மோன்புத்திரரையும் , மோவாபியரையும் சேயீர்மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். நாங்கள் வசிக்கும் லேஅவுட்டில் காலை 6:30 மணிக்குள்ளாக குப்பைத்தொட்டியை வெளியே வைத்து விட வேண்டும் , ஏழு மணிக்குள் அதை காலி… Continue reading இதழ்:2317 அவர் கிருபை நித்தியமானது! அழிந்து போவதல்ல!
இதழ்:2316 வனாந்திரத்திலும் தங்கப் புதையல் உண்டு!
2 நாளாகமம் 20:20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து , தெக்கொவாவின் வனாந்தரத்துக்குப் போக புறப்பட்டார்கள். புறப்படுகையில் யோசபாத் நின்று; யூதாவே , எருசலேமின் குடிகளே கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் , அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான். யூதாவுக்கு விரோதமாக முப்படைகள் படையெடுத்து வந்தபோது தேவனாகியக் கர்த்தர், அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும் கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் செய்வார் அவர்கள் சும்மா இருந்து இரட்சிப்பை பெற்றுக் கொள்வார்கள் என்றும்… Continue reading இதழ்:2316 வனாந்திரத்திலும் தங்கப் புதையல் உண்டு!
