2 நாளாகமம் 20 :21 -22 பின்பு அவன் ஜனத்தொடே ஆலோசனை பண்ணி ,பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் , ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்து போய், கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும் , பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதி செய்யத் தொடங்கின போது யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிரந்த அம்மோன் புத்திரரையும் , மோவாபியரையும் சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு… Continue reading இதழ்:1600 கர்த்தரைத் துதியுங்கள்! அவர் கிருபை என்றுமுள்ளது!
Category: Tamil Bible study
இதழ்:1599 வனாந்தரத்தில் சில்லென்று வீசிய பூங்காற்று!
2 நாளாகமம் 20:20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து , தெக்கொவாவின் வனாந்தரத்துக்குப் போக புறப்பட்டார்கள். புறப்படுகையில் யோசபாத் நின்று; யூதாவே , எருசலேமின் குடிகளே கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் , அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான். யூதாவுக்கு விரோதமாக முப்படைகள் படையெடுத்து வந்தபோது தேவனாகியக் கர்த்தர், அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும் கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் செய்வார் அவர்கள் சும்மா இருந்து இரட்சிப்பை பெற்றுக் கொள்வார்கள் என்றும்… Continue reading இதழ்:1599 வனாந்தரத்தில் சில்லென்று வீசிய பூங்காற்று!
இதழ்:1598 வெற்றிக்கு முன்னரே ஏறெடுத்த துதி ஆராதனை!
2 நாளாகமம்: 20 :18 , 19. அப்பொழுது யோசபாத் தரை மட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும், கர்த்தரைப் பணிந்து கொள்ளக் கர்த்தருக்கு முன்பாக தாழவிழுந்தார்கள் . கோகாத்தியரின் பத்திரரிலும் ,கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகாசத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் அவனுடைய குடிகளும், லேவியனான யகாசியேல் மூலமாக ஒரு அற்புதமான தேவ செய்தியை பெற்றார்கள் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்களுக்கு விரோதமாக… Continue reading இதழ்:1598 வெற்றிக்கு முன்னரே ஏறெடுத்த துதி ஆராதனை!
இதழ்:1597 அமர்ந்திருந்து வெற்றியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
2 நாளாகமம் 20 : 17 இந்த யுத்தத்தை பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பை பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் ;நாளைக்கு அவர்களுக்கு எதிராக புறப்படுங்கள் ;கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான். நேற்று நாம் தேவனாகிய கர்த்தர் ராஜாவாகிய யோசபாத்தையும் , யூதா மக்களையும் தைரியமாய் எதிரிகளை சந்திக்க புறப்பட்டு வனாந்தரத்துக்கு செல்லும்படி கூறியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்ல தேவன் யுத்தம் நடக்கும்… Continue reading இதழ்:1597 அமர்ந்திருந்து வெற்றியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
இதழ்:1596 இயேசுவே என் கப்பலோட்டியாயிரும்!
2 நாளாகமம் 20: 16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய் போங்கள்; இதோ அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள். நான் வர்ணம் ஆர்ட்ஸ் ஸ்கூல் மூலமாக படங்கள் வரையக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பென்சில் மூலமாக ஒரு அருமையான படத்தை வரைந்தேன். அது மிகவும் அழகாக வந்ததினால் எங்கள் வீட்டில் அதை பிரேம் செய்து மாட்டியிருந்தோம். அந்தப் படத்தில் அலைக்கழிக்கும் அலைகள் மத்தியில்… Continue reading இதழ்:1596 இயேசுவே என் கப்பலோட்டியாயிரும்!
இதழ்: 1595 யுத்தம் யாருடையது என்பதை மறந்து போக வேண்டாம்!
2 நாளாகமம்: 20:14,15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே கேளுங்க்ல்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார். இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. நேற்று நாம் ராஜாவகிய யோசபாத்தைப் பற்றிப்படிக்க ஆரம்பித்தோம். அவனுக்கு , மோவாப் புத்திரர், அம்மோன் புத்திரர், அம்மோனியருக்கு அப்புறம் உள்ள மனுஷர் என்ற முப்படைகளின் தாக்குதல் வந்தது என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல ராஜா பயந்து தேவனுடைய சமூகத்தைத் தேடினான் என்று பார்த்தோம்.… Continue reading இதழ்: 1595 யுத்தம் யாருடையது என்பதை மறந்து போக வேண்டாம்!
இதழ்:1594 நமக்கு எதிராய் வரும் முப்படைகள்!
2 நாளாகமம் 20 :1 -3 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கறையிலிருக்கிற சிரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து , கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் 2… Continue reading இதழ்:1594 நமக்கு எதிராய் வரும் முப்படைகள்!
இதழ்:1593 ஜெபிக்கத் தேவையானது வல்லமை அல்ல! உறவுதான்!
யாக்கோபு 5 :17 ,18 எலியா என்பவன் நம்மை போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை .மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையை பொழிந்தது, பூமி தன் பலனைத்தந்தது. கிறிஸ்துவுக்கு பின்னால் 48வது வருடம் கழித்து யாக்கோபு இந்த ஐந்தாவது அதிகாரத்தை எழுதும் பொழுது , அந்தக் காலத்தின் இளம் திருச்சபையாருக்கு , நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து ஒரு… Continue reading இதழ்:1593 ஜெபிக்கத் தேவையானது வல்லமை அல்ல! உறவுதான்!
இதழ்:1592 சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள மண்பாண்டங்கள்!
யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்.... எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது. இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று பார்க்கிறோம். இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு. வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம். வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே தேவன்,… Continue reading இதழ்:1592 சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள மண்பாண்டங்கள்!
இதழ்:1591 காலத்தால் அழிக்க முடியாத வார்த்தைகள்!
1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான். நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.… Continue reading இதழ்:1591 காலத்தால் அழிக்க முடியாத வார்த்தைகள்!
