பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் நாம் கடந்த ஆண்டின் முடிவில் தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த சில முக்கியமான கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம். நாம் பார்த்தவைகள் மட்டும் அல்லாமல், அந்நியரை உபசரித்தல், விதவைகளை பராமரித்தல் போன்ற இன்னும் அநேக கட்டளைகளையும் தேவனாகியக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். இப்பொழுது மறுபடியும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம புத்தகத்தின் மூலம் தொடருவோம். யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய்… Continue reading இதழ் 1075 என் அனைத்தும் அர்ப்பணமே!
1074 A VERY HAPPY AND A BLESSED NEW YEAR 2021
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பற்பல நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நாம் கடந்து வந்த கடினமான பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது இந்தப் புதிய வருடம் நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் வருடமாக அமையவேண்டுமென்று ஜெபிக்கிறேன்! ஒவ்வொரு புதிய ஆண்டிலும் புதிய தீர்மானங்கள் எடுப்பது நம்மில் அநேகரின் வழக்கம்! அந்தத் தீர்மானம் தேவனுடைய வார்த்தையை ஆழமாய்ப் படிப்பேன்… Continue reading 1074 A VERY HAPPY AND A BLESSED NEW YEAR 2021
இதழ்: 1073 காலம் பொன்னானது!
எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்! இந்த வருடத்தின் கடைசி நாள் இன்று! இந்த வருடம் நம் எல்லோருக்குமே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பதுதானே உண்மை! நாம் என்றுமே கனவில் காணாத சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக உருவெடுத்தன! எத்தனை குடும்பங்களில் இழப்பு! சாதாரணமாக வாழ முடியாத சூழல்! வருமானமின்றி தவித்த நாட்கள்! நம்முடைய ஆலயங்களின் கதவுகள் பூட்டப்பட்ட நாட்கள்! அப்பப்பா! எவ்வளவு கொடுமையான காலகட்டம் இது என்று எண்ணத் தோன்றுதல்லவா? இனிமையாக ஆரம்பித்த… Continue reading இதழ்: 1073 காலம் பொன்னானது!
இதழ்: 1072 நயங்காட்டி வஞ்சிக்காதே!
யாத்தி:22:16 நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன். யாத்திராகமத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளை சில நாட்கள் தியானிக்கலாம் என்று நினைத்தோம். இவைகளை தியானிக்காமல் இந்த புத்தகத்தை நாம் கடந்தால் அது சரியாகாது! இன்றைய வேதாகம பகுதியில் “மோசம் போகுதல்” என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். அப்படியானால் என்ன? சில நேரங்களில் நாம் எதையாவது செய்யக்கூடாது என்று உறுதியாய் வாழும்போது சோதனைகள் குறுக்கிட்டு… Continue reading இதழ்: 1072 நயங்காட்டி வஞ்சிக்காதே!
இதழ்: 1071 இரும்புத்தடைகள் போன்ற பிரமாணங்கள்!
யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. நாம் கிறிஸ்துமஸ் நாட்களுக்கு முன்பு யாத்திராகம புத்தகத்தில் மோசேயின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்த பெண்களைப் பற்றியும், பின்னர் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேல் மக்களை வெட்டாந்தரையில் நடக்கச்செய்த மாபெரும் அற்புதத்தையும் பார்த்தோம். இந்த வாரம் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் தேவனாகிய கர்த்தர் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நினைத்தேன்.… Continue reading இதழ்: 1071 இரும்புத்தடைகள் போன்ற பிரமாணங்கள்!
இதழ்: 1070 ஒவ்வொன்றும் தனிவிதம்!
யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன; எனக்கு மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய வீட்டில் பூக்கும் பூக்களைத்தான் இந்த ராஜாவின் மலர்களின் தோற்றப்படமாக நான் போடுவதுண்டு! ஒவ்வொரு மலரும் தனிவிதம் என்று ரசித்துப் பார்க்கத் தோன்றும்! தனி மணமும் உண்டு! இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு மலர்களுக்கும் தனி அழகையும் தனித் தன்மையையும், தனி மணத்தையும் அளித்து உருவாக்கிய தேவன், நம்மை எவ்வாறு உருவாக்கியிருப்பார்! ஒவ்வொரு மலருக்கும் உருவில், நிறத்தில், மணத்தில்… Continue reading இதழ்: 1070 ஒவ்வொன்றும் தனிவிதம்!
1069 தேவனுடைய விலையேறப்பெற்ற அன்பு!
1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை… Continue reading 1069 தேவனுடைய விலையேறப்பெற்ற அன்பு!
இதழ்:1068 கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?
லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். இன்று கிறிஸ்மஸ் ஈவ் என்று சொல்லப்படுகிற கிறிஸ்மஸ்க்கு முந்தின தினம்! உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது… Continue reading இதழ்:1068 கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?
இதழ்:1067 வானத்தில் ஓர் நட்சத்திரம்!
எண்ணாகமம் 24: 17 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.... இந்த கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை மத்தேயு சுவிசேஷத்தின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! இன்றுஇரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் பற்றிப் படிக்கலாம்! அதற்கு முன்பதாக ஒரு கேள்வி! நேற்றைய முன் தினம் இரவு கிறிஸ்மஸ் நட்சத்திரத்தை வானில் பார்த்தீர்களா? பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! சென்னையில் மேகமூட்டம் இருந்தாலும் அது ஓரளவுக்கு… Continue reading இதழ்:1067 வானத்தில் ஓர் நட்சத்திரம்!
இதழ் 1066 பிறந்தார்…. மானிடனாய் பிறந்தார்!
மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு… Continue reading இதழ் 1066 பிறந்தார்…. மானிடனாய் பிறந்தார்!
