ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம் பஞ்சத்தினால்… Continue reading இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை!
Month: November 2020
இதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்!
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து,… Continue reading இதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்!
இதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்!
ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி அதிக நாட்கள் நாம் தியானிக்கிறோம் என்று நினைக்கிறேன். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான். ஒரு… Continue reading இதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்!
ஜெபமே ஜெயம்!
தானியேலின் சீரான ஜெபம்! தானியேல் 9:3 நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி .... இன்று சனிக்கிழமை! நாம் ஜெபத்தில் ஒருமனப் படும் நாள்! தானியேலின் வழ்க்கை ஜெபமே ஜெயம் என்ற வார்த்தைக்கு முன்னோடி என்று நமக்குத் தெரியும்! தானியேல் 2 ம் அதிகாரத்தில் அவனை வாலிபனாகவும், 6 ம் அதிகாரத்தில் அவனை ஒரு வயதானவனாகவும் பார்க்கிறோம்! ஆனால் ஜெப வாழ்க்கை ஒருபோதும்… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்!
சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நாம் தொடர்ந்து யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் முன்னர், இன்று சற்று நேரம் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன். ஒருமுறை மார்டின் லூதருடைய மனைவி கெத்தரின் ( Catherine )அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர்,… Continue reading இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்!
இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் என் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன்… Continue reading இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்!
ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது? ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து… Continue reading இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்!
இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்???
ஆதி: 39:14 – 15 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன். நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்! அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம்… Continue reading இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்???
இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
ஆதி: 39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்ற பின் யூதா, தாமார் என்ற இருவரின் கதை வேதத்தில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்தோம். இன்று நான் யோசேப்பைப் பின் தொடரலாம்! யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது! யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! என்றுமே… Continue reading இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
ஜெபமே ஜெயம்!
பார சுமையால் உள்ளத்திலிருந்து எழுந்த ஒரு ஜெபம்! ஆபகூக் 1:2 கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பார சுமைகளாய் மாறியபோது ஆபகூக் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம்! கர்த்தர் ஏன் எனக்கு பதிலளிக்கவில்லை? ஏன் அமைதியாக இருக்கிறார்? என் ஜெபத்துக்கு பதில் வருமா? என்று தீரும் இந்தப் பிரச்சனைகள்? என்றெல்லாம் நாம் குமுறுவதில்லையா? நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்துக்கு உடனே பதில் வரவேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறோம்.… Continue reading ஜெபமே ஜெயம்!
