யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். சிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம்.… Continue reading மலர்:1இதழ்: 63 கருச்சிதைவும், சிசு கொலையும்….?????
Month: November 2010
மலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல…..
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” "கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை சிந்திக்க தூண்டியது. இன்று நாம் வேதத்தின் இரண்டாவது புஸ்தகமாகிய… Continue reading மலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல…..
மலர்:1இதழ்: 61 நீ என்னைக் குத்திய புண் இன்னும் ஆறவில்லை!
ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” யோசேப்புக்கு இழைக்கப்பட்ட தீங்கை பரலோக தேவன் எப்படி நன்மையாய், ஆசீர்வாதமாய் மாற்றியமைத்தார் என்று நாம் பார்த்தோம். இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி! உங்கள்… Continue reading மலர்:1இதழ்: 61 நீ என்னைக் குத்திய புண் இன்னும் ஆறவில்லை!
ஜெபக்கூடாரம்!
இரண்டத்தனையான ஆசிர்வாதத்தை கொடுத்த ஜெபம்! ஆதி:42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார்” யோபு தனக்காக அல்ல, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய தேவையை இரண்டத்தனையாய் சந்தித்தார். நம்மையே பற்றி சிந்திக்காமல், தேவனுடைய சமுகத்தில் நாம், நம்மை சுற்றயுயுள்ளவர்களுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் நம்முடைய தேவைகளை அற்புதமாய்… Continue reading ஜெபக்கூடாரம்!
மலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும்,எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம்… Continue reading மலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்!
மலர்:1இதழ்: 59 உப்பில்லாத பண்டம் குப்பையிலே!
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். கடந்த மே மாதம் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி… Continue reading மலர்:1இதழ்: 59 உப்பில்லாத பண்டம் குப்பையிலே!
மலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்?
ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி அதிக நாட்கள் நாம் தியானிக்கிறோம் என்று நினைக்கிறேன். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான்.… Continue reading மலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்?
மலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்!
சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். இன்று காலை மனதை அழுத்திய பாரத்தோடு எழும்பினேன். ‘ராஜாவின் மலர்கள்’ வாசித்துவிட்டு ஆசிர்வாதம் பெற்ற ஒரு சகோதரன் எழுதிய சாட்சி எனக்கு ஆறுதலாய் இருந்தது. ஆண்டவரே இந்த நாளில் நான் எதை செய்தாலும், உம்முடைய நாமம் மகிமைப்படட்டும் என்று ஜெபித்தேன். பல நாட்களுக்கு முன்பு மார்டின் லூதெருடைய மனைவி Katherine அம்மையார் எழுதிய சில வரிகளைப்… Continue reading மலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்!
ஜெபக்கூடாரம்
தேவனை இரக்கம் காட்ட வைத்த ஜெபம் யோனா: 2:1,10 ”அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ..... கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கி விட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், யோனா தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஓடினாலும்,, மனந்திருந்தி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணியபோது கர்த்தர் அவனை விழுங்கியிருந்த மீனின்… Continue reading ஜெபக்கூடாரம்
மலர்:1இதழ்: 55 காரிருளில் ஓர் ஒளி!
ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது? ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை… Continue reading மலர்:1இதழ்: 55 காரிருளில் ஓர் ஒளி!
