நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் என்னும் இரண்டெழுத்து பெருமை, பொறாமை, சுயநலம், அவல ஆசைகள், கேவலமான நடத்தை போன்ற பல பாவங்களுக்கு ஆதாரம் என்ற நமக்கு நன்றாகத் தெரியும். கடந்த சில நாட்களாக நாம் யெப்தாவின் கதையைப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆண்டவரே இந்தக் கதையின் மூலமாய் நீர் எனக்கு எதைக் கற்பிக்க விரும்புகிறீர் என்று நான் ஒவ்வொருநாளும் ஜெபித்துவிட்டுத்தான்… Continue reading இதழ்:1191 சுயநலமென்ற சுமைகளை இறக்கி விடு!
Category: Thought for today
இதழ்:1190 பொறுப்பற்றத் தன்மை வேண்டாம்!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; எதற்கெடுத்தாலும் ஆள்க்காட்டி விரலை நீட்டி மற்றவர்கள்மேல் குற்றம் சாட்டுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பழியை பந்து எறிந்து விளையாடுவது போலத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப்… Continue reading இதழ்:1190 பொறுப்பற்றத் தன்மை வேண்டாம்!
இதழ் :1189 வார்த்தைகளை எண்ணாதே! எடை போடு!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.” என்னுடைய ஊழியத்தின் காரணமாக பல ஊர்களுக்கு நான் காரில் பிரயாணப்படுவதுண்டு. சில நேரங்களில் காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு தருமபுரியில் உள்ள எங்களது மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கு சென்று, பின்னர்அதே நாளில் அங்கிருந்து 3… Continue reading இதழ் :1189 வார்த்தைகளை எண்ணாதே! எடை போடு!
இதழ்:1188 இதை உன்னிடம் கேட்டாரா?
நியாதிபதிகள்:11:34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை, குமாரத்தியும் இல்லை. ஒரு மகளின் சரிதையைப் படிக்கப்போகிறோம்! பெயர் தெரியாத ஒரு மகள்! வயது தெரியாத ஒரு மகள்! அவள் தந்தை பெயர் யெப்தா என்று மட்டும் தெரியும்! அவன் ஒரு பரஸ்திரீயின் மகன்! ஒரு முரட்டு வீரன், யுத்தத்துக்கு அழைப்பவர்களுக்கு உதவியாக சென்று… Continue reading இதழ்:1188 இதை உன்னிடம் கேட்டாரா?
இதழ் :1187 கிடைத்தவுடன் கொடுத்தவரை மறந்து விடாதே!
நியாதிபதிகள் 11: 32 ” யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்”. இன்றைக்கு உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்! உண்மையாக மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! நீங்கள் வாழ்வின் உச்சியில் சுகமாய் வாழ்ந்த போது எடுத்த ஏதோ ஒரு முடிவினால் வெட்கப்பட்டு தாழ்சியடைந்து நாணிப்போனதுண்டா? அப்படிப்பட்ட தவறு செய்திருப்பீர்களானால், இன்றைய வேதாகமப்பகுதி உங்களுக்குத்தான்! நான் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ள பெயர்களை பார்க்கும்போது இந்தப்பெயர் இங்கு ஏன் இடம்… Continue reading இதழ் :1187 கிடைத்தவுடன் கொடுத்தவரை மறந்து விடாதே!
இதழ்:1186 நாளைக்கு நடக்கப் போவதை அறிவாயோ?
நியாதிபதிகள்: 11:30,31 அப்பொழுது யெப்தா ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் , நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச்சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். நீதிமொழிகளின் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மிகவும் ஞானமுள்ள , ” நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” (நீதி: 27:1) என்ற இந்த வார்த்தைகளை நமக்காகத்தான் கூறியிருப்பார் போலும்… Continue reading இதழ்:1186 நாளைக்கு நடக்கப் போவதை அறிவாயோ?
இதழ்: 1185 நம் பக்கமாய் காற்று வீசும்போது வரும் கர்வம்!
நியாதிபதிகள் 11: 4 – 6 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.” தன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா? கிலெயாத் என்பவன்… Continue reading இதழ்: 1185 நம் பக்கமாய் காற்று வீசும்போது வரும் கர்வம்!
இதழ் 1184 உன்னை நொறுக்கி உருவாக்கும் குயவனிடம் ஒப்புவி!
நியாதிபதிகள்: 11: 1 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.” ஒருமுறை என்னுடைய அப்பாவை இருதய சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் வைத்திருந்த போது, ஒரு நர்ஸ் வந்து அப்பாவின் கடந்த காலத்தைப் பற்றி எழுதினார்கள். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன பழக்கங்கள் இருந்தன? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அப்பாவின் கடந்த காலத்துக்கும் அவருடைய இருதயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை சிந்திக்க வைத்தன அந்த நர்ஸின் கேள்விகள். நம்முடைய கடந்த… Continue reading இதழ் 1184 உன்னை நொறுக்கி உருவாக்கும் குயவனிடம் ஒப்புவி!
இதழ்: 1183 தன் நேரம்தான் சரி என்று நினைக்கும் கடிகாரம் போல!
நியா: 21:25 “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்”. கடந்த சில மாதங்களாக நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம். கர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள்.… Continue reading இதழ்: 1183 தன் நேரம்தான் சரி என்று நினைக்கும் கடிகாரம் போல!
இதழ்: 1182 நம்மை எச்சரிக்கும் ஒரு நாயகனின் வாழ்வு!
நியா: 8: 31- 35 ” சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான். பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருந்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய போவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கப்பண்ணப்பட்டான். கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய் பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய… Continue reading இதழ்: 1182 நம்மை எச்சரிக்கும் ஒரு நாயகனின் வாழ்வு!
