நம்முடைய ஜெபம் தேவனைக் கிரியை செய்ய வைக்கும்!
“ எலியா என்பவன் நம்மைப் போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதப்படிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும், ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை.
மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது. ( யாக்கோபு: 5: 17,18)
நம்மைப் போல தினசரி பாடுள்ள சாதாரண ஒரு மனிதனின் ஜெபத்துக்கு கர்த்தரை கிரியை செய்ய வைக்க வல்லமையுண்டு என்று பார்க்கிறோம். எலியா ஜெபித்ததால் கர்த்தர் வானத்தை அடைத்தார், மறுபடியும் அவன் ஜெபித்ததால் வானத்தை திறந்தார்!
தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து அவருடைய வல்லமையான பதிலைப் பெற்ற அனுபவம் உண்டா? வாருங்கள் நாம் ஒன்று சேர்ந்து ஜெபிப்போம்!
விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com விலாசத்துக்கு அனுப்புங்கள்.
பிரேமா சுந்தர் ராஜ்
