1 சாமுவேல்: 18:6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலிமிருந்து ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும், கீதவாத்தியங்களோடும், சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். காலை எழுந்தவுடன் கவலையில்லாமல் பாடும் பறவைகளைக் கேட்டதுண்டா? காற்றினால் அசைவாடும் மரங்களின் ஆடல்பாடலைக் கேட்டதுண்டா? நிம்மதியாகப்புல்வெளியில் மேயும் மாடுகளைப் பார்த்ததுண்டா? இரவில் பளிச்சென்று மின்னும் நட்சத்திரங்களைக் கண்டதுண்டா? இவை எந்தக் கவலையும் இல்லாமல் எத்தனை சமாதானமாய், சந்தோஷமாய் இருக்கின்றன என்று நான் அடிக்கடி நினைப்பேன்!… Continue reading இதழ்: 614 நம்பினால் கிடைக்கும் பரிசு!
Month: January 2019
இதழ்: 613 புத்தியாய் செயல்படு!
1 சாமுவேல் 18:5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனை போர்ச்சேவகர்களுக்கு அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் கூறூகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது. இந்த அழகிய வாலிபன் புத்தியாய்க்… Continue reading இதழ்: 613 புத்தியாய் செயல்படு!
இதழ் 612 பட்டயம் இல்லை! வெற்றி உண்டு!
1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய வசனம் நமக்குத் தெளிவாக கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று காட்டுகிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம். தாவீது தன் சிறியக் கரங்களில் கவணையும், கற்களையும் ஏந்தி கோலியாத்துக்கு எதிராக வந்தக்… Continue reading இதழ் 612 பட்டயம் இல்லை! வெற்றி உண்டு!
இதழ்: 611 அன்று தப்புவித்தவர் இன்றும் தப்புவிப்பார்!
1 சாமுவேல் 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். ஒருமுறை எங்களுடைய ரிசார்ட் இருக்கும் வால்பாறை அருகே கரடியால் தாக்கப்பட்ட ஒருவரின் படத்தை யாரோ அனுப்பியிருந்தார்கள். உடம்பு சிலிர்த்தது! வலது கையை கடித்து குதறியிருந்தது. என்னக் கொடூரமான மிருகம் என்று நினைத்தேன்! இரண்டுமுறை எங்கள் கார் முன்னால் கரடி குறுக்கே ஓடியததைப் பார்த்திருக்கிறேன். இன்றைய வசனத்தில்,ஒருமுறை கரடி மட்டும் அல்ல சிங்கமும் தாவீதையும்… Continue reading இதழ்: 611 அன்று தப்புவித்தவர் இன்றும் தப்புவிப்பார்!
இதழ் 610 அதிகாரம் மாறிப்போச்சே!
1 சாமுவேல் 17:8 அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும். நான் சிறு வயதில் இந்த தாவீது கோலியாத் கதையை எத்தனை முறை கேட்டிருப்பேன்! அதன்பின்னர் எத்தனையோமுறை இந்தக் கதையை வேதாகமத்திலிருந்து படித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு தெரிந்த கதையை வாசிப்பது போல வாசித்துவிட்டு அதன் முக்கிய அம்சங்களை… Continue reading இதழ் 610 அதிகாரம் மாறிப்போச்சே!
இதழ்: 609 ஒரு மாவீரன் உருவாகியக் கதை!
1 சாமுவேல் 17: 36,37 அந்தச் சிங்கத்தையும், கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்.விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். என்னுடைய பேரன் Zac க்கு பிரியமான விளையாட்டு பில்டிங் பிளாக் (building blocks) வைத்து ரயில் பெட்டி கட்டுவதுதான். அவன் ஒவ்வொரு பெட்டியாக… Continue reading இதழ்: 609 ஒரு மாவீரன் உருவாகியக் கதை!
இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!
1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர். ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார். மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட… Continue reading இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!
இதழ்: 607 அகத்தின் அழகு!
1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான். சரித்திரத்தில் நடக்கும் சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், கண்டுமிருக்கலாம். வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம் நடந்த சம்பவங்கள் நாம் வேதத்தில்… Continue reading இதழ்: 607 அகத்தின் அழகு!
இதழ் : 606 சவுலின் பதவி விலக்கம் எதனால்?
1 சாமுவேல் 16:1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 1 சாமுவேல் 15 ம் அதிகாரத்தில் நாம் கடைசியாக சென்ற வாரம் பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். 35… Continue reading இதழ் : 606 சவுலின் பதவி விலக்கம் எதனால்?
இதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா?
1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். நாம் நாமாக இல்லாமல் யாரோவாக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர். இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய… Continue reading இதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா?